|
120
125
130
135
140
145
150
|
மண்கணை முழவ மாக ஆங்கோர்
கருந்தலை வாங்கிக் கையகத் தேந்தி
இரும்பே ருவகையின் எழுந்தோர் பேய்மகள்
புயலோ குழலோ கயலோ கண்ணோ
குமிழோ மூக்கோ இதழோ கவிரோ
பல்லோ முத்தோ வென்னா திரங்காது
கண்டொட் டுண்டு கவையடி பெயர்த்துத்
தண்டாக் களிப்பி னாடுங் கூத்துக்
கண்டனன் வெரீஇக் கடுநவை யெய்தி
விண்டோர் திசையின் விளித்தனன் பெயர்ந்தீங்
கெம்மனை காணாய் ஈமச் சுடலையின்
வெம்முது பேய்க்கென் உயிர்கொடுத் தேனெனத்
தம்மனை தன்முன் வீழ்ந்துமெய் வைத்தலும்
பார்ப்பான் றன்னொடு கண்ணிழந் திருந்தவித்
தீத்தொழி லாட்டியென் சிறுவன் றன்னை
யாருமில் தமியே னென்பது நோக்காது
ஆருயி ருண்ட தணங்கோ பேயோ
துறையு மன்றமுந் தொல்வலி மானும்
உறையுளுங் கோட்டமுங் காப்பாய் காவாய்
தகவிலை கொல்லோ சம்பா பதியென
மகன்மெய் யாக்கையை மார்புறத் தழீஇ
ஈமப் புறங்காட் டெயிற்புற வாயிலில்
கோதமை யென்பாள் கொடுந்துயர் சாற்றக்
கடிவழங்கு வாயிலிற் கடுந்துய ரெய்தி
இடையிருள் யாமத் தென்னையீங் கழைத்தனை
என்னுற் றனையோ எனக்குரை யென்றே
பொன்னிற் பொலிந்த நிறத்தாள் தோன்ற
ஆருமி லாட்டியென் அறியாப் பாலகன்
ஈமப் புறங்காட் டெய்தினோன் றன்னை
அணங்கோ பேயோ ஆருயி ருண்டது
உறங்குவான் போலக் கிடந்தனன் காணென
அணங்கும் பேயும் ஆருயி ருண்ணா
பிணங்குநூன் மார்பன் பேதுகந் தாக
ஊழ்வினை வந்திவன் உயிருண்டு கழிந்தது
|