பக்கம் எண் :

பக்கம் எண் :85

Manimegalai-Book Content
6. சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை
 




155





160





165





170





175





180





185

மாபெருந் துன்பநீ ஒழிவா யென்றலும்
என்னுயிர் கொண்டிவன் உயிர்தந் தருளிலென்
கண்ணில் கணவனை இவன்காத் தோம்பிடும்

இவனுயிர் தந்தென் உயிர்வாங் கென்றலும்
முதுமூ தாட்டி இரங்கினள் மொழிவோள்
ஐய முண்டோ ஆருயிர் போனால்
செய்வினை மருங்கிற் சென்றுபிறப் பெய்துதல்
ஆங்கது கொணர்ந்துநின் ஆரிடர் நீக்குதல்

ஈங்கெனக் காவதொன் றன்றுநீ யிரங்கல்
கொலையற மாமெனுங் கொடுத்தொழின் மாக்கள்
அவலப் படிற்றுரை யாங்கது மடவாய்
உலக மன்னவர்க் குயிர்க்குயி ரீவோர்
இலரோ இந்த ஈமப் புறங்காட்

டரசர்க் கமைந்தன ஆயிரங் கோட்டம்
நிரயக் கொடுமொழி நீயொழி யென்றலும்
தேவர் தருவர் வரமென் றொருமுறை
நான்மறை யந்தணர் நன்னூ லுரைக்கும்
மாபெருந் தெய்வ நீயரு ளாவிடின்

யானோ காவேன் என்னுயி ரீங்கென
ஊழி முதல்வன் உயிர்தரி னல்லது
ஆழித் தாழி யகவரைத் திரிவோர்
தாந்தரின் யானுந் தருகுவன் மடவாய்
ஈங்கெ னாற்றலுங் காண்பா யென்றே

நால்வகை மரபி னரூபப் பிரமரும்
நானால் வகையி னுரூபப் பிரமரும்
இருவகைச் சுடரும் இருமூ வகையிற்
பெருவனப் பெய்திய தெய்வத கணங்களும்
பல்வகை யசுரரும் படுதுய ருறூஉம்

எண்வகை நரகரும் இருவிசும் பியங்கும்
பன்மீ னீட்டமும் நாளுங் கோளும்
தன்னகத் தடக்கிய சக்கர வாளத்து
வரந்தரற் குரியோர் தமைமுன் நிறுத்தி
அரந்தை கெடுமிவ ளருந்துய ரிதுவெனச்

சம்பா பதிதான் உரைத்தஅம் முறையே