|
உள்ளது. பணிந்தனள் : முற்றெச்சம். முன்னரும் 1"பதியகத்
துறையுமோர் பைந்தொடி யாகி" என வந்தமை காண்க. நின்றீர் : வினைப்பெயர்
; அது மணிமேகலையையும் உளப்படுத்திற்று.
16. ஆங்கு அவள்
ஆங்கு அவன் கூறியது உரைத்தலும்-அக்காலைச் சுதமதி அவ் வுதயகுமரன் மொழிந்ததனைக்
கூறிய வளவில்; அவன் கூறியது - சித்திராபதியாற் சேர்தலுமுண்டு என்பது.
17-26.
அரசிளங் குமரன் ஆயிழை தன்மேல் தணியாவுள்ளம் தவிர்ந்திலன் ஆகி - மன்னவன்
புதல்வன் மணிமேகலை யிடத்துக் கொண்ட ஆசை நீங்காத உள்ளத்தினைத் தவிர்ந்திலனாய்,
அறத்தோர் வனம் என்று அகன்றனன் ஆயினும்-தவத்தோர்களுடைய பொழில் என்று
இங்கு நின்றும் நீங்கினனாயினும், புறத்தோர் வீதியில் பொருந்துதல் ஒழியான்
- புறத்திலுள்ளவர்களது தெரு வின்கண்ணே சேர்தலை நீங்கான், பெருந்தெரு ஒழித்து
இப்பெருவனஞ் சூழ்ந்த - ஆதலால் பெருந் தெருவுகளை விட்டு இந்தப் பெரிய சோலையைச்
சூழ்ந்துள்ள, திருந்து எயிற் குடபால் சிறு புழை போகி - திருத்தமுற்ற மதிலின்
மேற்றிசையினிடத்தேயுள்ள சிறிய வாயிலின் வழியே சென்று, மிக்க மாதவர் விரும்பினர்
உறையும்-தவத்தான் மிக்க முனிவர்கள் விரும்பி யுறையும், சக்கரவாளக்கோட்டம்
புக்கால் - சக்கரவாளக்கோட்டத்தை யடைந்தால், கங்குல் கழியினும் கடுநவை
எய்தாது - அங்கே இரவினைக் கழிப்பினும் கொடிய துன்ப முண்டாகாது, அங்குநீர்
போம் என்று அருந்தெய்வம் உரைப்ப - ஆகலின் நீவிர் அங்கே செல்வீராக என்று
அரிய தெய்வம் கூறியருள;
அறத்றோர்
துறவிகளானமையின், புறத்தோர் என்பதற்கு அவர்க்குப் புறமாகவுள்ள இல்லற நெறியினர்
என வுரைத்தலும் அமையும்; புறத்து ஓர் வீதியில் என்றலுமாம். புழை-நுழை வாயில்.
கழியினும் - கழிப்பினும். இனி, ஆண்டே இராக்காலம் கழிவதாயினும் எனலுமாம்
கடுநவை - உதயகுமரனாற் பற்றப்படுதல்.
27-33. வஞ்ச விஞ்சையன் மாருத வேகனும் அமசெஞ்சாயல் நீயும்
அல்லது-வஞ்சமுடைய விஞ்சையனாகிய மாருதவேகன் என்பானும் அழகிய சிவந்த மென்மைத்
தன்மையினையுடைய நீயும் அன்றி, நெடுநகர் மருங்கின் உள்ளோர் எல்லாம் - இப் பெரிய
நகரின்கண் உள்ளோரனைவரும், சுடுகாட்டுக் கோட்டம் என்றலது உரையார் - சுடுகாட்டுக்
கோட்டம் என்பதேயன்றி வேறு பெயர் கூறார், சக்கரவாளக்கோட்டம் அஃது என - அதனைச் சக்கர
வாளக்கோட்டம் என்று, மிக்கோய் கூறிய உரைப்பொருள் அறியேன் - மேம்பாடுடைய நீ கூறிய
மொழியின் பொருளை அறியேன்,
1
மணி. 5: 96 .
|