|
பாடையும் உள்ளீட்டறுவையும்-வெள்ளிலாகிய
பாடையும் உள்ளே பண்டங்கள் இடப்பட்ட உறியும், பரிந்த மாலையும் உடைந்த கும்பமும்
-பாடையிற்கட்டி அறுத்தெறிந்த மாலைகளும் உடைந்த குடங்களும், நெல்லும் பொரியும்
சில்பலி அரிசியும்-நெல்லும் பொரியும் சிறுபலியாகிய அரிசியும், யாங்கணும்
பரந்த ஓங்கிரும் பறந்தலை - எவ்விடத்தும் பரந்து கிடக்கும் மிகப்பெரிய பாழிடத்தில்;
புழல்-ஒருவகைச்
சிற்றுண்டி. வெள்ளிற்பாடை: இருபெயரொட்டு.
உள்ளீட்டறுவை-உள்ளீட்டையுடைய கிழியுமாம். சில்பலி - சிறுபலி ;
1"தூவெள்
ளரிசி, சில்பலிச் செய்து" என்பது காண்க. வாகைமன்றம் முதலிய மன்றங்கள்
யாங்கணும் குழிசி முதலியன பரந்த பறந்தலை யென்க.
97-104. தவத்துறை
மாக்கள் மிகப் பெருஞ் செல்வர்-தவநெறியிற் செல்லுந் துறவியர் மிக்க பெருஞ்
செல்வமுடையோர், ஈற்றிளம் பெண்டிர் ஆற்றாப்பாலகர் - ஈன்றணிமையையுடைய இளமகளிர்
ஆற்றாத இளஞ்சிறார், முதியோர் என்னான் இளையோர் என்னான் - ஆண்டில் முதிர்ந்தோர்
என்னாமலும் இளையோர் என்னாமலும், கொடுந் தொழிலாளன் கொன்றனன் குவிப்ப
- கொடுந் தொழிலை யுடைய காலன் கொன்று குவிப்ப, இவ் அழல்வாய்ச் சுடலை தின்னக்கண்டும்
- அழல் வாயினையுடைய சுடலை தின்னக்கண்டும், கழிபெருஞ்செல்வக் கள்ளாட்டு அயர்ந்து
- மிக்க பெருஞ்செல்வமாகிய கள்ளையுண்டு விளையாடுதலைச் செய்து, மிக்க நல்லறம்
விரும்பாது வாழும் - மேன்மை தரும் நல்லறங்களை விரும்பாமல் வாழ்கின்ற, மக்களில்
சிறந்த மடவோர் உண்டோ - மக்களிலுஞ் சிறந்த அறிவிலிகள் உளரோ;
என்னான் என்பதனைத் தவத்துறைமாக்கள்
முதலியவற்றோடும் ஒட்டுக. கொன்றனன்; முற்றெச்சம். அழலாகிய வாய் என உருவகம்.
இகரச்சுட்டு அதன் கொடுமையை உணர்த்திற்று. ஆரிடையில் பறந்தலையில் சுடலை
(49, 66, 101) என்க. பறந்தலையாகிய சுடலை யென்னலுமாம். அறிவை மயக்குதலின்
செல்வத்தைக் கள் என்றார். ''தவத் துறைமாக்கள்......மடவோருண்டோ'' என்பது
தெய்வங் கூறியது ; கவி கூறியதுமாம்.
105-6. ஆங்கது
தன்னை ஓர் அருங்கடி நகர் என - அங்ஙனமாகிய புறங்காட்டை ஓர் அரிய காப்பமைந்த
நகரமென்றெண்ணி, சார்ங்கலன் என்போன் தனிவழிச் சென்றான் - தனிவழியே
சென்ற சார்ங்கலன் என்னும் சிறுவன் ;
107-9. என்பும்
தடியும் உதிரமும் யாக்கை என்று - என்புந் தசையும் குருதியுமாகியவற்றை உடம்பு
என்று, அன்புறு மாக்கட்கு அறியச் சாற்றி - அன்பு வைக்கின்ற மக்களுக்கு அறியக்கூறி,
வழுவொடு
1 முருகு.
233-4.
|