|
நாற்சந்தியிலே கொடியணிந்த தேரினையுடைய எம் அரசன் வெற்றிபெறுக
என்று, இடிக்குரல் முழக்கத்து இடும்பலி ஓதையும் இடியனைய குரல் முழக்கத்துடன்
பலியிடுகின்ற ஓசையும் ;
வலித்த-போரினைக் கருதிய என்றுமாம். ஆடவர்-ஈண்டுப்பகைவர்.
|
81--85. ஈற்றிளம் பெண்டிர் ஆற்றாப்
பாலகர் - ஈன்றணிமையை யுடைய இளமகளிர் ஆற்றாச் சிறுவர், கடுஞ்சூல்
மகளிர் நெடும்புண் உற்றோர் - முதற் சூலையுடைய மங்கையர் பெரிய
புண்களால் வருந்தினோர், தம் துயர் கெடுக்கும் மந்திரமாக்கள்
- ஆகிய இவர்களின் துன்பங்களை நீக்குகின்ற மந்திரவாதிகள், மன்றப்
பேய் மகள் வந்து கைக்கொள்க என-மன்றத்தின்கணுள்ள பேய்மகள்
வந்து பெறுக என்றுகூறி, நின்று எறி பலியின் நெடுங்குரல் ஓதையும்-நின்று
பலி எறிகின்ற நீண்ட குரல் முழக்கமும் ;
|
கடுஞ்சூல் - முதற்சூல்;
1"கடுஞ்சூன் முண்டகம்
கதிர்மணி கழாஅலவும்" என்றார் பிறரும். பலியிடும்பொழுது நெடுங்குர
லெடுத்துக்கூப்பிடுவராகலின் ''பலியினெடுங்குரல்'' என்றார்:
|
86. பல்வேறு
ஓதையும் பரந்து ஒருங்கிசைப்ப - ஆகிய பலவேறு வகைப்பட்ட ஓசையும்
பரந்து ஒன்றாக முழங்க;
|
87--93. கேட்டு
உளம் கலங்கி ஊட்டிருள் அழுவத்து-அவற்றை யெல்லாங் கேட்டு மனங்கலங்கி
ஊட்டினாற்போன்ற இருட்பரப் பிலே, முருந்து ஏர் இளநகை நீங்கிப்
பூம்பொழில் - மயிற்பீலியின் முளைபோன்ற அழகிய பற்களையுடைய
சுதமதி உவவனத்தினின்றும் நீங்கி, திருந்து எயிற் குடபால் சிறு
புழை போகி - திருந்திய மதிலின் மேற்றிசையிலுள்ள சிறிய வாயிலின்
வழியே சென்று, மிக்க மாதெய்வம் வியந்து எடுத்து உரைத்த-பெருமைபொருந்திய
மணிமேகலாதெய்வம் வியந்து எடுத்துக்கூறிய, சக்கரவாளக் கோட்டத்
தாங்கண் - சக்கரவாளக் கோட்டத்திண்கண், பலர் புகத் திறந்த
பகுவாய் வாயில்-பலருஞ் செல்லுமாறு திறக்கப்பட்டிருக்கின்ற பெரிய
வாய்போலும் வாயிலையுடைய, உலக அறவியின் ஒருபுடை இருத்தலும்-ஊரம்பலத்தில்
ஒருபக்கத்தில் இருத்தலும்;
|
ஊட்டுதல் - பூசுதல்.
அறவி - அம்பலம் சுதமதி எழுந்து பல் வேறு ஓதையும் ஒருங்கிசைப்பக்
கேட்டு உளங்கலங்கி நீங்கிப்போகி ஒருபுடை யிருத்தலும் என்க.
|
94--97. கந்துடை நெடுநிலைக் காரணம் காட்டிய அந்தில் எழுதிய அற்புதப் பாவை
- நெடிய தோற்றத்தையுடைய தூணாகிய அவ் விடத்தே பழவினையாகிய காரணத்தை
அனைவருக்கும் அறிவிக்கும் பொருட்டு மயன் என்னும் தெய்வத் தச்சனால்
எழுதப்பட்டு
|
சிறுபாண். 148.