பக்கம் எண் :

பக்கம் எண் :117

::TVU::
8. மணிபல்லவத்துத் துயருற்ற காதை
 





55






60

பறவையும் முதிர்சிறை பாங்குசென் றதிராது
தேவர்கோ னிட்ட மாமணிப் பீடிகை
பிறப்புவிளங் கவிரொளி அறத்தகை யாசனம்
கீழ்நில மருங்கின் நாகநா டாளும்
இருவர் மன்னவர் ஒருவழித் தோன்றி

எமதீ தென்றே எடுக்க லாற்றார்
தமபெரும் பற்று நீங்கலும் நீங்கார்
செங்கண் சிவந்து நெஞ்சுபுகை உயிர்த்துத்
தம்பெருஞ் சேனையொடு வெஞ்சமம் புரிநாள்
இருஞ்செரு ஒழிமின் எமதீதென்றே

பெருந்தவ முனிவன் இருந்தற முரைக்கும்
பொருவறு சிறப்பிற் புரையோ ரேத்தும்
தரும பீடிகை தோன்றிய தாங்கென்

உரை

1--12.   ஈங்கு இவள் இன்னணமாக - புகார் நகரிலே சுதமதி இவ்வாறு வருந்த, இருங்கடல் வாங்குதிரை உடுத்த மணிபல்லவத் திடை-பெரிய கடலினது வளைந்த அலைகளாற் சூழப்பட்ட மணிபல்லவத்தின்கண், தத்துநீர் அடைகரைச் சங்கு உழுதொடுப்பின் முத்து விளை கழனி-சங்குகளால் உழுது விதைக்கப்பட்ட முத்துக்கள் விளைகின்ற மோதுநீர் சூழ் அடைகரையாகிய கழனியில், முரி செம்பவளமொடுவிரைமரம் உருட்டும் திரை உலாப்பரப்பில்-வளைந்த சிவந்த பவளங்களுடன் சந்தனம் அகில் முதலிய மணம்பொருந்திய மரங்களை உருட்டுகின்ற அலைகள் உலாவும் கடற்கரையில், ஞாழல் ஓங்கிய தாழ்கண் அசும்பின்-புலிநகக் கொன்றை உயர்ந்த தாழ்ந்த இடத்தையுடைய சேற்றில், ஆம்பலும் குவளையும் தாம் புணர்ந்து மயங்கி - அல்லியும் குவளையுமாகிய மலர்கள் சேர்ந்து கலந்து, வண்டு உண மலர்ந்த குண்டு நீர் இலஞ்சி-வண்டுகள் உண்ணுமாறு மலரப்பெற்ற ஆழமாகிய நீரினையுடைய பொய்கைக் கரையில், முடக்கால் புன்னையும் மடப்பூர் தாழையும் - வளைந்த அடியை யுடைய புன்னையும் மடல்களாலாகிய பூவினையுடைய தாழையும், வெயில் வரவு ஒழிந்த பயில் பூம்பந்தர்-வெயிலினது வரவை நீக்கிய அழகிய பந்தரின்கண், அறல் விளங்கு நிலாமணல் நறுமலர்ப் பள்ளி - அறல் விளங்குகின்ற நிலாவைப் போன்ற வெள்ளிய மணலில் நறிய மலர்களாலாகிய படுக்கையிலிருந்து, துஞ்சு துயில் எழூஉம் அஞ்சில் ஓதி - மெய்மறந்த உறக்கத்தினின்றும் எழுந்த அழகிய சிலவாகிய கூந்தலையுடைய மணிமேகலை ;