சேவல் அரசனாகப் பன்னிறப் புள்ளினம் பரந்து
ஒருங்கு ஈண்டி
- அன்னச்சேவலை அரசனாகக்கொண்டு
பலநிறங்களையுடைய
பறவை இனங்கள் பரந்து ஒன்றாகக் கூடி, பாசறை
மன்னர் பாடி
போல - பகையரசர் இருவருடைய படை வீடுகளில் இருவர்
படையும்
எதிரெதிர் இருத்தல்போல, வீசுநீர்ப் பரப்பின்
எதிர் எதிர்
இருக்கும் -வீசுகின்ற நீர்ப்பரப்பின் கண்ணே எதிரெதிரே
இருக்கின்ற, துறையும் துறைசூழ் நெடுமணற் குன்றமும்
- நீர்த்
துறைகளும் துறைகளைச் சுற்றிலுமுள்ள பெரிய மணற் குன்றுகளும்
ஆகிய,யாங்கனும் திரிவோன்-எவ்விடத்தும் திரிகின்றவள்
;
திரைதவழ் பறவை - குளுவை முதலியன. விரிசிறைப்
பறவை - போதா முதலியன. எழுந்துவீழ் சில்லை - சிரல் முதலியன.
திரை தவழ் பறவை முதலிய நான்கும் நீர்வாழ் பறவைகள். பறவையும்பறவையும்
சில்லையும் முழுவலுமாகிய பன்னிறப் புள்ளினம் என்க. பாசறை மன்னர்
- போர் குறித்துப் பாசறையிற் சென்று தங்கியிருக்கும் மன்னர்.
பாடிபோல - பாடியிற் படைகள் எதிரெதிர் இருத்தல்போல - 1"கம்புட்
கோழியும் கனைகுரல் நாரையும், செங்கா லன்னமும் பைங்காற் கொக்கும்,
கானக் கோழியும் நீர்நீறக் காக்கையும், உள்ளும் ஊரலும் புள்ளும்
புதாவும், வெல்போர் வேந்தர் முனையிடம் போலப். பல்வேறு குழூஉக்குரல்
பரந்த வோதையும்" என்பது ஈண்டு ஒத்து நோக்கற்பாலது.
35--43.பாங்கினம் காணாள்-பக்கத்திலுள்ள
இனங்களைக் காணாத வளாய், குரல்தலை கூந்தல் குலைந்து பின் வீழ
- பூங்கொத்தை இடத்தேயுடைய குழல் அவிழ்ந்து பின்னே வீழ, அரற்றினள்
கூஉய் - கூவிப் புலம்பி, அழுதனள் ஏங்கி - ஏங்கி அழுது, வீழ்துயர்
எய்திய விழுமக் கிளவியின் தாழ்துயர் உறுவோள் - ஆழமாகிய துன்பத்தின்கண்ணே
பொருந்தினோள் மிக்க துயரமடைந்த துன்பத்தைப் புலப்படுத்தும் மொழிகளால்,
தந்தையை உள்ளி - தந்தையாகிய கோவலனை நினைந்து, எம் இதில்
படுத்தும் வெவ்வினை உருப்ப-எம்மை இவ்வகைத் துன்பத்தின்கண் அகப்படுத்தும்
கொடிய தீவினையானது வந்து உருப்ப, கோற்றொடி மாதரொடு வேற்று நாடு
அடைந்து-திரட்சியாகிய வளையல்களை யணிந்த என் அன்னை கண்ணகியோடு
வேறு நாட்டை அடைந்து, வைவாள் உழந்த மணிப்பூண் அகலத்து ஐயாவோ
என்று அழுவோள் முன்னர் - கூரிய வாளினால் வெட்டுண்டு வருந்திய மணிப்பூண்
தாங்கிய மார்பினையுடைய ஐயாவோ என்று அழுகின்றவள் முன்னே ;
குரல் - கூந்தலின்
திரட்சியுமாம். அரற்றினள், அழுதனள் என்பன முற்றெச்சம். உறுவோள்
விழுமக்கிளவியின் அழுவோள் எனக்