ஏது நிகழ்ச்சி ஈங்கின் றாகலின்
கவேர கன்னிப் பெயரொடு விளங்கிய
தவாக்களி மூதூர்ச் சென்றுபிறப் பெய்துதி
அணியிழை நினக்கோர் அருந்துயர் வருநாள்
மணிமே கலாதெய்வம் வந்து தோன்றி
அன்றப் பதியில் ஆரிருள் எடுத்துத்
தென்றிசை மருங்கிலோர் தீவிடை வைத்தலும்
வேக வெந்திறல் நாகநாட் டரசர்
சினமா சொழித்து மனமாசு தீர்த்தாங்கு
அறச்செவி திறந்து மறச்செவி யடைத்துப்