|
பேர் இன்பத்து உலகு துயர் கெடுப்ப அருளிய அந்நாள்
- அரு
ளாகிய அறத்தினைக்கொண்ட ஒப்பற்ற
பேரின்பத்தை உலக
மக்களின் துயரத்தை நீக்கும் பொருட்டு அருளிச் செய்த அந் நாளில்;
|
நகர் கேடெய்தினமை கூறவே நாகநாட்டு நானூறு
யோசனைப் பரப்புக் கேடெய்திய தென்பதும் பெற்றாம். ஏத்திய -
ஏத்த ; ஏத்திய அந்நாள் அருளிய அந்நாள் எனத் தனித்தனி முடித்தலுமாம்.
இன்பத்து இன்பத்தை: சாரியை நிற்க உருபு தொக்கது.
|
38-47. அரவக்கடல்
ஒலி அசோதரம் ஆளும்-கடல் ஒலிபோன்ற முழக்கத்தையுடைய அசோதர
நகரத்தையாளும், இரவிவன்மன் ஒரு பெருந்தேவி
- இரவிவன்மனுடைய ஒப்பற்ற பெருந்தேவியாகிய,
அலத்தகச் சீறடி அமுதபதி வயிற்று-செம்பஞ்சிக் குழம்பு தோய்ந்த
சிறிய அடிகளையுடைய அமுதபதி என்பவள் வயிற்றில்
இலக்குமி என்னும் பெயர் பெற்றுப் பிறந்தேன்-பிறந்து
இலக்குமி என்னும் பெயர் பெற்றேன், அத்திபதி எனும் அரசன் பெருந்தேவி
-அத்திபதி என்னும் அரசனுடைய பெருந்தேவியும்,
சித்திபுரம் ஆளும் சீதரன் திருமகள்-சித்திபுரத்தை
ஆண்ட சீதரன் என்பவனுடைய அழகிய மகளும் ஆகிய, நீலபதி எனும் நேரிழை
வயிற்றில் - நீலபதி என்கின்ற மெல்லியலின் வயிற்றில், காலை
ஞாயிற்றுக் கதிர்போல் தோன்றிய-கதிர்களுடைய இளம்பரிதியைப்போல்
உதித்த, இராகுலன் தனக்குப் புக்கேன் - இராகுலனுக்கு
மனைவியாகப் புகுந்தேன், அவனொடு பராவரு மரபின் நின் பாதம் பணிதலும்-அவ்விராகுலனோடு
வழுத்துதற்குரிய நின் அடிகளைப் பணிதலும் ;
|
கடல் அரவமென மாறுக. அலத்தகன் - செவ்வரக்கு
என்பாருமுளர். பிறந்து பெயர் பெற்றேன் என விகுதி பிரித்துக் கூட்டுக.
கதிர் ஞாயிறு என்க.
|
48-50. எட்டிரு நாளில் இவ்விராகுலன்
தன்னைத் திட்டிவிடம் உணும்-பதினாறு நாளில் இந்த இராகுலனைத் திட்டிவிடம்
என்னும் பாம்பு உண்ணும், செல்லுயிர் போனால் தீயழல் அவனொடு சேயிழை
மூழ்குவை - அவனது உயிர் பிரிந்தால் நீயும் அவனொடு தீயிடைக் குளிப்பாய்;
|
திட்டி - திருஷ்டி; திட்டிவிடம்-கண்ணில் நஞ்சுடைய
பாம்பு ; அது பார்த்தால் உயிர்கள் சாம் என்பர். இந்நூலின்கண்
பின்பு (11; 100 ; 21 ; 11; 21: 40 ; 23 : 69 ; 23 : 84.)
பலவிடத்து இது கூறப்பட்டுள்ளமை காண்க. 1"திட்டியின்
விட மன்ன கற்பின் செல்வியை" என்றார் கம்பரும். சேயிழை : முன்னிலை.
|