பக்கம் எண் :

பக்கம் எண் :129

::TVU::
9. பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை
 
1"கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியாற், றோட்கப் படாத செவி" என்பவாகலின். மறச்செவி அடைத்து-செவி மறவுரையைக் கேளாது அடைத்து.

65--71.   சாதுயர் கேட்டுத் தளரந்து உகு மனத்தேன் - இராகுலன் இறப்பான் என்ற துன்பத்தைக் கேட்டுத் தளர்ந்து சிந்துகின்ற உள்ளமுடையேன், காதலன் பிறப்பும் காட்டாயோ என - என் கணவனது மறு பிறப்பையும் காட்டாயோ என வேண்ட, ஆங்கு உனைக் கொணர்ந்த அரும்பெரும் தெய்வம் பாங்கில் தோன்றிப் பைந்தொடி கணவனை ஈங்கிவன் என்னும்-அவ்விடத்தில் நின்னைக் கொண்டு சென்ற அரிய பெரிய தெய்வம் பக்கத்தில் தோன்றி நின் கணவனை இன்னான் என்று உரைக்கும், என்று எடுத்து ஓதினை-என எடுத்துரைத்தாய், ஆங்கத் தெய்வம் வாராதோ என ஏங்கினள் அழூஉம் இளங்கொடி தான் என் - அத்தெய்வம் இப்பொழும் வாராதோ என்று ஏங்கி அழுது கொண்டிருந்தாள் என்க.

சாதுயர் - சாகுந் துயர். பைந்தொடி: முன்னிலை. பிறப்பும்; உம்மை இறந்தது தழீஇய எச்சப்பொருளது.

அதுகண்ட ஆயிழைதன்னை அறியாளாயினாள்; அப்பொழுது அவள் கைகள் தலைமேற் குவிந்தன. அங்ஙனம் குவிந்த கையினளாய் உகுத்து வந்து சேர்ந்து எழுவோள் பிறப்பை யுணர்ந்து, "மாதவ, உணர்ந்தோய், மயக்கமற உணர்ந்தேன், பிரம தருமனே, உரைப்போய், ''கேடெய்தும்;இதன்பாலொழிக'' என்று சொல்ல, வேந்தனும் சாற்றி நீங்கிச் செல்வோன் இருப்ப, எங்கோன், நீ உரைத்த நாளில் நகர் கேடெய்தலும், நின் மலரடியை எல்லாம் ஏத்த அருளிய அந்நாளில், புக்கேன் அவனோடு நின் பாதன் பணிதலும், ''மூழ்குவை, எய்துதி, வருநாளில் வைத்தலும், கைதொழுதி, தெளிவாய்; என்று நீ சொல்ல, காட்டாயோ வென்று யான் கேட்ப ஓதினை; அத்தெய்வம் வாராதோ'''' என்று இளங்கொடி ஏங்கி அழும் என்க.

பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை முற்றிற்று.


1 குறள். 418.