பிராயமுடைய பெண்'' என நினைந்து, அன்னோர் தத்தம் சமயவுண்மைகளைக் கூறார்,
ஆகலின், அப்பொழுது நீ வேற்றுருக் கொள்ளவேண்டும்'' என்று கூறி, வேற்றுரு வெய்துவிப்பதும்
வானிலே இயங்கச் செய்வதுமாகிய இரண்டு மந்திரங்களை அவளுக்கு அறிவுறத்தி, நீ
புத்தர் அருளிய திருவறம் எய்துதல் உறுதி யென்றுணர்வாயாக ; பீடிகையை வணங்கி
நின் பதிக்கண் செல்வாயாக, என்று எழுந்தோங்கி, "யான் மறந்ததும் உண்டு,"
என்று மீட்டும் இறங்கி, "மககள் யாக்கை உணவின் பிண்டம்; இப்பெரு மந்திரம்
இரும் பசி அறுக்கும்," என்று அதனை அருளிச் செயது; வானில் எழுந்து சென்றது.]
5
10
15
20
25
அறவோ னாசனத் தாயிழை யறிந்த
பிறவிய ளாயினள் பெற்றியு மைதென
விரைமல ரேந்தி விசும்பூ டிழிந்து
பொருவறு பூங்கொடி பூமியிற் பொலிந்தென
வந்து தோன்றிய மணிமே கலாதெய்வம்