பக்கம் எண் :

பக்கம் எண் :143

Manimegalai-Book Content
11. பாத்திரம் பெற்ற காதை


20






25





30





35





40





45





50

பூங்கொடி யன்னாய் யார்நீ யென்றலும
ஆயிழை தன்பிறப் பறிந்தமை யறிந்த

தீவ திலகை செவ்வனம் உரைக்கும்
ஈங்கிதன் அயலகத் திரத்தின் தீவத்
தோங்குயர் சமந்தத் துச்சி மீமிசை
அறவியங் கிழவோன் அடியிணை யாகிய
பிறவி என்னும் பெருங்கடல் விடூஉம்
அறவி நாவாய் ஆங்குள தாதலின்

தொழுதுவலங் கொண்டு வந்தேன் ஈங்குட்
பழுதில் காட்சியிந் நன்மணிப் பீடிகை
தேவர்கோன் ஏவலிற் காவல் பூண்டேன்
தீவ திலகை என்பெய ரிதுகேள்
தரும தலைவன் தலைமையின் உரைத்த

பெருமைசால் நல்லறம் பிறழா நோன்பினா
கண்டுகை தொழுவோர் கண்டதற் பின்னர்ப்
பண்டைப் பிறவியர் ஆகுவர் பைந்தொடி
அரியர் உலகத் தாங்கவர்க் கறமொழி
உரிய துலகத் தொருதலை யாக

ஆங்ஙன மாகிய அணியிழை இதுகேள்
ஈங்கிப் பெரும்பெயர்ப் பீடிகை முன்னது
மாமலர்க் குவளையும் நெய்தலும் மயங்கிய
கோமுகி என்னுங் கொழுநீ ரிலஞ்சி
இருதிள வேனிலில் எரிகதி ரிடபத்

தொருபதின் மேலும் ஒருமூன்று சென்றபின்
மீனத் திடைநிலை மீனத் தகவையின்
போதித் தலைவனொடு பொருந்தித் தோன்றும்
ஆபுத் திரன்கை யமுத சுரபியெனும்
மாபெரும் பாத்திரம் மடக்கொடி கேளாய்

அந்நா ளிந்நாள் அப்பொழு திப்பொழுது
நின்னாங்கு வருவது போலும் நேரிழை
ஆங்கதிற் பெய்த ஆருயிர் மருந்து
வாங்குநர் கையகம் வருத்துதல் அல்லது
தான்தொலை வில்லாத் தகைமைய தாகும்

நறுமலர்க் கோதை நின்னூ ராங்கண்