92--8.
ஆற்றுநர்க்கு
அளிப்போர் அறவிலை பகர்வோர்-பொறுக்கும் வன்மையுடை யோராகிய செல்வர்க்கு
அளிக்கின்றவர்கள் அறத்தினை விலை கூறுவோ ரேயாவர், ஆற்றா மாக்கள் அரும்பசி
களைவோர் மேற்றே உலகின் மெய்நெறி வாழ்க்கை-வறிஞர்களின் தீர்த்தற்கரிய
பசியை நீக்குவோரின் கண்ணதே உலகத்தின் உண்மை நெறியாகிய வாழ்க்கை,
மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம் - அணுக்கள் செறிந்த நிலவுலகில்
வாழ்வோர்களில் எல்லாம், உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே - உணவினை
அளித்தோரே உயிர்கொடுத்தோராவர், உயிர்க்கொடை பூண்ட உரவோய் ஆகி-உயிரினை
அளிக்கும் அறத்தினை மேற்கொண்ட வலிய அறிவினை உடையையாகி, கயக்கறு நல்லறம்
கண்டனை என்றலும்-கலங்குதலற்ற நல்லறத்தினை அறிந்தாய் என்று தீவதிலகை
உரைத்தலும் ;
ஆற்றுநர்க்கு-கைம்மாறு செய்யும் வலியுடையோர்க்கு
என்றுமாம். அறவிலை பகர்வோர் - அறமென்னும் பெயரால் வாணிகஞ் செய்வோர்
என்றுமாம் ; பயன் கருதிச் செய்வோராகின்றமையின் "அறவிலை பகர்வோர்"
என்றாள். 1
"இம்மைச்
செய்தது மறுமைக் காமெனும் அறவிலை வாணிகன் ஆஅ யல்லன்" 2"ஏற்றகை
மாற்றாமை யென்னானுந் தாம் வரையா, தாற்றாதார்க் கீவதா மாண்கடன்" என்பன ஈண்டு
அறியற் பாலன. வாழ்வோர்க்கெல்லாம்- வாழ்வோ ரெல்லாருள்ளும் என்க :
வேற்றுமை மயக்கம். 3"உண்டி கொடுத்தோர்
உயிர் கொடுத்தோரே" எனப் புறப்பாட்டில் வந்துள்ளமையும் காண்க. கயக்கு
- கயங்குதல் ; கலங்குதல்; "கயக்கறுமாக்கள்" (16 : 85) என்பர் பின்னும்.
99--106.
விட்ட பிறப்பில் யான் விரும்பிய காதலன்-போன பிறவியில் என்னால் விரும்பப்பட்ட
கணவன், திட்டிவிடம் உணச் செல் உயிர் போவுழி-திட்டிவிடமெனும் பாம்பு தீண்டப்பெற்று
உயிர் நீங்கினவிடத்து, உயிரொடு வேவேன் உணர்வு ஒழிகாலத்து - தீயிற் குளித்து
உயிருடன் வேகாநிற்கும் யான் உணர்வு நீங்குந் தறுவாயில், வெயில் விளங்கு
அமயத்து விளங்கித் தோன்றிய - வெயில் விளங்குகின்ற உச்சிப் பொழுதில்
விளக்கமுற்றுத் தோன்றிய, சாது சக்கரன் தனை யான் ஊட்டிய காலம் போல்வதோர்
கனாமயக்குற்றேன்-சாது சக்கரனை யான் உண்பித்த பொழுதைப் போல்வதாகிய
ஒரு கனாவாகிய மயக்கத்தை யடைந்தேன், ஆங்கதன் பயனே - அக் கனாப்போலும்
நினைவின் பயனே, ஆருயிர் மருந்தாய் ஈங்கு இப்பாத்திரம் என் கைப்புகுந்தது
- அரிய உயிர்களைக் காக்கும் மருந்தாகி இப் பாத்திரம் ஈண்டு என் கையிற்புக்கது
;
1
புறம். 134. 2
நாலடி. 98. 3
புறம். 18.
|