பக்கம் எண் :

பக்கம் எண் :160

Manimegalai-Book Content
12.அறவணர்த் தொழுத காதை

மணிமேகலையும் உயிர்களின் பசித் துயர்கெடப் பாத்திரத்தை யெடுத்தனள். (இதில் புத்தர் தோன்றுங்காலத்து உலகில் இன்னின்ன நிகழுமெனக் கூறியிருப்பன அறிந்து இன்புறத்தக்கவை.)]





5





10





15





20





25





30

ஆங்கவர் தம்முடன் அறவண அடிகள்
யாங்குளர் என்றே இளங்கொடி வினாஅய்
நரைமுதிர் யாக்கை நடுங்கா நாவின்
உரைமூ தாளன் உறைவிடம் குறுகி
மைம்மலர்க் குழலி மாதவன் திருந்தடி

மும்முறை வணங்கி முறையுளி யேத்திப்
புதுமலர்ச் சோலை பொருந்திய வண்ணமும்
உதய குமரனாங் குற்றுரை செய்ததும்
மணிமே கலாதெய்வமும் மணிபல் லவத்திடை
அணியிழை தன்னை அகற்றிய வண்ணமும்

ஆங்கத் தீவகத் தறவோன் ஆசனம்
நீங்கிய பிறப்பு நேரிழைக் களித்ததும்
அளித்த பிறப்பின் ஆகிய கணவனைக்
களிக்கயல் நெடுங்கட் கடவுளிற் பெற்றதும்
தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும்

வெவ்வினை உருப்ப விளிந்துகே டெய்தி
மாதவி யாகியுஞ் சுதமதி யாகியுங்
கோதையஞ் சாயல் நின்னொடுங் கூடினர்
ஆங்கவர் தந்திறம் அறவணன் தன்பால்
பூங்கொடி நல்லாய் கேளென் றுரைத்ததும்

உரைந்த பூங்கொடி ஒருமூன்று மந்திரம்
தனக்குரை செய்துதான் ஏகிய வண்ணமும
தெய்வம் போயபின் தீவ திலகையும்
ஐயெனத் தோன்றி யருளொடும் அடைந்ததும
அடைந்த தெய்வம் ஆபுத் திரன்கை

வணங்குறு பாத்திரம் வாய்மையின் அளித்ததும்
ஆபுத் திரன்திறம் அறவணன் தன்பால்
கேளென் றுரைத்தக் கிளரொளி மாதெய்வம்
போகென மடந்தை போந்த வண்ணமும்
மாதவன் தன்னை வணங்கினள் உரைத்தலும்

மணமே கலையுரை மாதவன் கேட்டுத்