பக்கம் எண் :

பக்கம் எண் :161

Manimegalai-Book Content
12.அறவணர்த் தொழுத காதை




35






40





45





50





55





60





65

தணியா இன்பம் தலைத்தலை மேல்வரப்
பொற்றொடி மாதர் நற்றிறஞ் சிறக்க
உற்றுணர் வாய்நீ யிவர்திறம் உரைக்கேன்
நின்னெடுந் தெய்வம் நினக்கெடுத் துரைத்த

அந்நா ளன்றியும் அருவினை கழூஉம்
ஆதி முதல்வன் அடியிணை யாகிய
பாதபங் கயமலை பரவிச் செல்வேன்
கச்சய மாளுங் கழற்கால் வேந்தன்
துச்சயன் தன்னயோர் சூழ்பொழிற் கண்டேன்

மாபெருந் தானை மன்ன நின்னொடும்
தேவியர் தமக்கும் தீதின் றோவென
அழிதக வுள்ளமோ டரற்றின னாகி
ஒளியிழை மாதர்க் குற்றதை யுரைப்போன்
புதுக்கோள் யானைமுன் போற்றாது சென்று

மதுக்களி மயக்கத்து வீரை மாய்ந்ததூஉம்
ஆங்கது கேட்டோ ரரமிய மேறித்
தாங்காது வீழுந்து தாரைசா வுற்றதூஉம்
கழிபெருந் துன்பங் காவலன் உரைப்ப
பழவினைப் பயன்நீ பரியலென் றெழுந்தேன்

ஆடுங் கூத்தியர் அணியே போல
வேற்றோர் அணியொடு வந்தீ ரோவென
மணிமே கலைமுன் மடக்கொடி யார்திறம்
துணிபொருள் மாதவன் சொல்லியும் அமையான்
பிறவியும் அறவியும் பெற்றிஇன் உணர்ந்த

நறுமலர்க் கோதாய் நல்கினை கேளாய்
தரும தலைவன் தலைமையில் உரைத்த
பெருமைசால் நல்லறம் பெருகா தாகி
இறுதியில் நற்கதி செல்லும் பெருவழி,
அறுகையும் நெருஞ்சியும் அடர்ந்துகண்ணடைத்தாங்குச்

செயிர்வழங்கு தீக்கதி திறந்து கல்லென்று
உயிர்வழங்கு பெருநெறி ஒருதிறம் பட்டது
தண்பனி விழுங்கிய செங்கதிர் மண்டிலம்
உண்டென உணர்தல் அல்லதி யாவதும்
கண்டினிது விளங்காக் காட்சி போன்றது