பக்கம் எண் :

பக்கம் எண் :162

Manimegalai-Book Content
12.அறவணர்த் தொழுத காதை





70






75





80





85





90





95


சலாகை நுழைந்த மணித்துளை அகவையின
உலாநீர்ப் பெருங்கடல் ஓடா தாயினும்
ஆங்கத் துளைவழி உகுநீர் போல
ஈங்கு நல்லறம் எய்தலும் உண்டெனச்
சொல்லலும் உண்டியான் சொல்லுதல் தேற்றார்

மல்லன்மா ஞாலத்து மக்களே யாதலின்
சக்கர வாளத்துத் தேவ ரெல்லாம்
தொக்கொருங் கீண்டித் துடிதலோ கத்து
மிக்கோன் பாதம் விழுந்தனர் இரப்ப
இருள்பரந்து கிடந்த மலர்தலை யுலகத்து

விரிகதிர்ச் செல்வன் தோன்றின னென்ன
ஈரெண் ணூற்றோ டீரெட் டாண்டில்
பேரறி வாளன் தோன்றுமதற் பிற்பாடு
பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி
இரும்பெரு நீத்தம் புகுவது போல

அளவாச் சிறுசெவி யளப்பரு நல்லறம்
உளமலி யுவகையொ டுயிர்கொளப் புகூஉம
கதிரோன் தோன்றுங் காலை ஆங்கவன்
அவிரொளி காட்டும் மணியே போன்று
மைத்திருள் கூர்ந்த மனமாசு தீரப்

புத்த ஞாயிறு தோன்றுங் காலைத
திங்களும் ஞாயிறும் தீங்குறா விளங்கத
தங்கா நாண்மீன் தகைமையின் நடக்கும்
வானம் பொய்யாது மாநிலம் வளம்படும்
ஊனுடை உயிர்கள் உறுதுயர் காணா

வளிவலக் கொட்கும் மாதிரம் வளம்படும்
நளியிரு முந்நீர் நலம்பல தரூஉம்
கறவைகன் றார்த்திக் கலநிறை பொழியும்
பறவை பயன்றுய்த் துறைபதி நீங்கா
விலங்கு மக்களும் வரூஉப்பகை நீங்கும்

கலங்கஞர் நரகரும் பேயும் கைவிடும்
கூனுங் குறளும் ஊமுஞ் செவிடும்
மாவும் மருளும் மன்னுயிர் பெறாஅ
அந்நாள் பிறந்தவன் அருளறங் கேட்டோர்