பக்கம் எண் :

பக்கம் எண் :163

Manimegalai-Book Content
12.அறவணர்த் தொழுத காதை

100




105





110





115





120
இன்னாப் பிறவி யிகந்தோர் ஆகலின்

போதி மூலம் பொருந்திய சிறப்பின்
நாதன் பாதம் நவைகெட ஏத்துதல்
பிறவி தோறும் மறவேன் மடக்கொடி
மாதர் நின்னால் வருவன இவ்வூர்
ஏது நிகழ்ச்சி யாவும் பலவுள

ஆங்கவை நிகழ்ந்த பின்னர் அல்லது
பூங்கொடி மாதர் பொருளுரை பொருந்தாய
ஆதி முதல்வன் அருந்துயர் கெடுக்கும்
பாதபங் கயமலை பரசினர் ஆதலின்
ஈங்கிவ ரிருவரும் இளங்கொடி நின்னோ

டோங்குயர் போதி உரவோன் திருந்தடி
தொழுதுவலங் கொண்டு தொடர்வினை நீங்கிப்
பழுதில் நன்னெறிப் படர்குவர் காணாய்
ஆருயிர் மருந்தாம் அமுத சுரபியெனும்
மாபெரும் பாத்திரம் மடக்கொடி பெற்றனை

மக்கள் தேவர் எனஇரு சார்க்கும்
ஒத்த முடிவின் ஓரறம் உரைக்கேன்
பசிப்பிணி தீர்த்தல் என்றே அவரும்
தவப்பெரு நல்லறம் சாற்றினர் ஆதலின்
மடுத்ததீக் கொளிய மன்னுயிர்ப் பசிகெட

எடுத்தனள் பாத்திரம் இளங்கொடி தானென்.

உரை


1--6.ஆங்கவர் தம்முடன் அறவணவடிகள் யாங்குளர் என்றே இளங்கொடி வினாஅய் - மணிமேகலை மாதவியுடனும் சுதமதியுடனும் கூடி அறவணவடிகள் எவ்விடத்திலிருக்கின்றார் என்று வினாவிக் கொண்டு, நரைமுதிர் யாக்கை நடுங்கா நாவின் உரை மூதாளன் உறைவிடம் குறுகி-நரைமுதிர்ந்த உடலையும் நா நடுங்காத மொழிகளையுமுடைய முதியோராகிய அறவணவடிகள் உறைவிடத்தை அடைந்து, மைம்மலர்க் குழலி - மலர்களுடன் கூடிய முகில் போலுங் கூந்தலையுடைய மணிமேகலை, மாதவன் திருந்தடி - அறவண முனிவரது திருந்திய திருவடிகளை, மும்முறை வணங்கி முறையுளி ஏத்தி - மூன்று தரம் பணிந்து முறைப்படி துதித்து ;

நா நடுங்கா உரையின் என மாறுக. நடுங்காத நாவினையும் முதிர்ந்த உரையினையும் உடையான் எனலுமாம்; நடுங்கா நா - வழுவற்றசொல்;