சூரிய காந்தம் கதிரவன் ஒளியைக் காட்டுதல்போலத்
திங்கள் முதலியன புத்தனது தோற்றத்தினைப் புலப்படுத்துமென்க. பொருளுக்கேற்ற
உவமையில் புறவிருள் நீங்கக் கதிரோன் தோன்றுங்காலை என் விரித்துரைக்க.
உறா: ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம். தங்கா என்றும் நடக்கும் என்றும் கூறுதலின்
நாண்மீன் என்பதற்கு ஈண்டு ஞாயிறு திங்க ளொழிந்த கோட்கள் என்று பொருள்
கொள்ளுதல் பொருந்தும் ; நட்சத்திரங்களையே தோற்றம்பற்றி அங்ஙனம் கூறினாரெனலுமாம்.
ஊனுடையுயிர்கள்-தேவரல்லாத மக்கள் முதலிய உயிர்கள் : 1"ஊனடைந்த
வுடம்பின் பிறவியே" என்பது காண்க. ஊன் உடை-உடம்பு மெலிந்த என்பாருமுளர்.
மாதிரம் - மலையுமாம். 2;"வலமா
திரத்தான் வளிகொட்ப," "மாதிரங் கொழுக்க என்றார் பிறரும். நிறை - நிறைய
: விகாரம் ; சால் என்பாருமுளர். விலங்கு முதலியவற்றை அவ்வவ் வினமெனக் கொள்க
; அன்றித் திணை விரவி அஃறிணை முடிபுற்றன என்னலுமாம். அஞர் - துன்புறுதலை;
துன் புறத்தலை என்றலுமாம். கூன் முதலிய ஆறனோடு, குருடு, உறுப்பில் பிண்டம்
ஆகிய இரண்டுங்கூட்டி எண்வகை எச்சமென்பர்; 3"சிறப்பில்
சிதடும் உறுப்பில் பிண்டமும், கூனுங் குறளு மூமுஞ் செவிடும், மாவு மருளுமுளப்பட வாழ்நர்க்,
கெண்பே ரெச்ச மென்றிவை யெல்லாம்" என்பது காண்க.
99--107.அந்நாட் பிறந்தவன் அருளறம் கேட்டோர் - அந்நாளில் பிறந்த
புத்தனது அருளறத்தைக் கேட்டோர்கள், இன்னாப் பிறவி இகந்தோர் ஆதலின் -
துன்பந்தரும் பிறவியைக்கடந்தவர்கள் ஆகலினால்; போதி மூலம்பொருந்திய சிறப்பின்-அரசமரத்தடியிலமர்ந்த
சிறப்பினையுடைய, நாதன் பாதம் நவைகெட ஏத்துதல் - தலைவன் திருவடிகளைக் குற்றம்
நீங்குமாறு துதித்தலை, பிறவி தோறும் மறவேன் மடக்கொடி - மடக்கொடியே யான்
பிறவி தோறும் மறவேன், மாதர் நின்னால் வருவன இவ்வூர் ஏதுநிகழ்ச்சி யாவும்
பலவுள-நங்காய் நின்னால் இவ்வூரில் உண்டாவனவாகிஏது நிகழ்ச்சிகள் பல உள்ளன,
ஆங்கவை நிகழ்ந்த பின்னர் அல்லது - அவை நிகழ்ந்த பின்பன்றி, பூங்கொடி
மாதர் பொருளுரை பொருந்தாய்-பூங்கொடிபோலும் மாதே அறவுரை கேளாய்;
அருளறம்
- தயாதன்மம்; அருளிய அறம் என்றுமாம். மறவேல் எனப் பிரித்துரைத்தலுமாம்.
ஏது நிகழ்ச்சி என்பதுபற்றி முன்னர் (3 : 4) உரைத்தமை காண்க. மாதர் என்பன
விளி. பொருளுரை - மெய்யுரை : ஈண்டு அறவுரை; பொருள்-மெய்மையாதலை
4"பொய்யில் புலவன் பொருளுரை" 5"பொய்யில்
காட்சியோர் பொருளுரை யாதலின்" என்பவற்றானும், 6"பொருள்
சேர் புகழ்" என்பதற்குப் பரிமேலழகர் உரைத்த உரையாணும் அறிக.
1
பெரியபு. பாயிரம் 2 2 மதுரை.
5. 10. 3 புறம். 28. 4
மணி. 22: 61. 5 சிலப்.
28: 168. 6 குறள். 2: 5.
|