85
90
95
100
105
110
115
|
காவதங் கடந்து கோவலர் இருக்கையின
ஈன்ற குழவிக் கிரங்கே னாகித்
தோன்றாத் துடவையின் இட்டனன் போந்தேன்
செல்கதி யுண்டோ தீவினை யேற்கென்
றல்லலுற் றழுத அவள்மகன் ஈங்கிவன்
சொல்லுதல் தேற்றேன் சொற்பயம் இன்மையின்
புல்லலோம் பன்மின் புலைமகன் இவனென
ஆபுத் திரன்பின் பமர்நகை செய்து
மாமறை மாக்கள் வருகுலங் கேண்மோ
முதுமறை முதல்வன் முன்னர்த் தோன்றிய
கடவுட் கணிகை காதலஞ் சிறுவர்
அருமறை முதல்வர் அந்தணர் இருவரும்
புரிநூன் மார்பீர் பொய்யுரை யாமோ
சாலிக் குண்டோ தவறென வுரைத்து
நான்மறை மாக்களை நகுவனன் நிற்ப
ஓதல் அந்தணர்க் கொவ்வான் என்றே
தாதை பூதியுந் தன்மனை கடிதர
ஆகவர் கள்வனென் றந்தணர் உறைதரும்
கிராம மெங்கணுங் கடிஞையிற் கல்லிட
மிக்க செல்வத்து விளங்கியோர் வாழும்
தக்கண மதுரை தான்சென் றெய்திச்
சிந்தா விளக்கின் செழுங்கலை நியமத்,
தந்தின் முன்றில் அம்பலப் பீடிகைத்
தங்கினன் வதிந்தத் தக்கணப் பேரூர்
ஐயக் கடிஞை கையின் ஏந்தி
மையறு சிறப்பின் மனைதொறு மறுகிக்
காணார் கேளார் கால்முடப் பட்டோர்
பேணுந ரில்லோர் பிணிநடுக் குற்றோர
யாவரும் வருகவென் றிசைத்துட னூட்டி
உண்டொழி மிச்சிலுண் டோடுதலை மடுத்துக்
கண்படை கொள்ளுங் காவலன் றானென்.
|