57--62.
பொன்
அணி நேமி வலங்கொள் சக்கரக் கை-பொன்னாலாகிய அழகிய வட்டத்தினையுடைய
சக்கரப் படையை வலக்கையிற் கொண்ட, மன்னுயிர் முதலவன் மகன் எமக்கு அருளிய-
நிலைபெற்ற உயிர்கட்கு முதல்வனாகிய திருமாலினுடையமகனான நான்முகன் எங்கட்கு
அருளிச்செய்த, அருமறை நன்னூல் அறியாது இகழ்ந்தனை-அரிய மறைநூற் பொருள்களை
அறியாமற் பழித்துரைத்தனை, தெருமரல் உள்ளத்துச் சிறியை நீ - சுழலுகின்ற
உள்ளத்தையுடைய சிறியோனாகிய நீ, அவ் ஆ மகன் ஆதற்கு ஒத்தனை - அப் பசுவின்
புதல்வன் ஆதற்கு ஒத்தனை, அறியா நீ மகன் அல்லாய் கேள் என இகழ்தலும்-மகனல்லையாகிய
அறிவில்லாத நீ இதனைக் கேள் என்று இகழ்ந்து கூறுதலும் ;
வலங்கொள் - வெற்றியைக் கொள்ளும்
என்றுமாம். தெருமரல்-சுழற்சி, கலக்கம். நூற்பொருளை யறியும் அறிவிலா னென்பார்,
''ஆ மகனாதற் கொத்தனை'' என்றார். அறியா ஆ எனக் கூட்டுதலுமாம். மகனல்லாய்
என்பதற்கு இக் காதையுள்முன் உரைத்தமை காண்க.
63--9.
ஆன்மகன்
அசலன் - அசலன் என்பவன் பசுவின் மகன், மான் மகன் சிருங்கி-சிருங்கி என்பான்
மானின் மகன், புலி மகன் விரிஞ்சி - விரிஞ்சி யென்பவன் புலியின் மகன்,
புரையோர் போற்றும் நரிமகன் அல்லனோ கேச கம்பளன் -மேலோர் போற்றும்
கேசகம்பளன் நரியின் மகன் அல்லனோ, ஈங்கிவர் நும்குலத்து இருடி கணங்கள்
என்று - இவர்களெல்லாம் நும் குலத்து வந்த முனிவர் கூட்டம்என்று, ஓங்குயர்
பெருஞ் சிறப்பு உரைத்தலும் உண்டால் - மிக உயர்ந்த பெருஞ் சிறப்புக் கூறுதலும்
உண்டாகலால், ஆவொடு வந்த அழிகுலம் உண்டோ நான்மறை மாக்காள் நன்னூல்
அகத்து என - நான்மறை யந்தணீர் நும் மறை நூலிடத்து ஆவால் வந்த அழிகுலம்
உண்டோ என வினவ ;,
புரையோர் போற்றும் கேசகம்பளனெனக்
கூட்டுக. உண்டால்- உண்டாதலால்; ஆல்: அசையுமாம். ஆவொடு - ஆவால். அழிகுலம்
- இழிகுலம். நன்னூலகத்து ஆவினால் அழிகுலமுண்டாயதென்று கூறப்பட்டுள்ளதோ என்றபடி.
''ஆமகனாதற் கொத்தனை'' என அந்தணர் இகழ்ந்தனராதலின், அதனைப் பரிகரித்தற்கு
''ஆவொடு வந்த அழிகுல முண்டோ'' என்றான்.
70-1.
ஆங்கவர்
தம்முள் ஒரு அந்தணன் உரைக்கும் ஈங்கிவன் தன் பிறப்பு யான் அறிகுவன் என
- அம் மறையவர்களுள் ஒருவன் இவனுடைய பிறப்பையான் அறிவேன் என்று கூறுவான்
;
72-7. நடவை
வருத்தமொடு நல்கூர் மேனியள்-வழிக்கொண்ட வருத்தத்துடன் இளைத்த உடம்பை
யுடையவளாகிய, வடமொழி யாட்டி-பார்ப்பனி, மறை முறைஎய்தி-வேத விதிப்படி
சென்று குமரிபாதம் கொள்கையின் வணங்கி - குமரித் தெய்வத்தின்
|