பக்கம் எண் :

பக்கம் எண் :188

Manimegalai-Book Content
14. பாத்திர மரபு கூறிய காதை


85





90





95





100

இழிந்தோன் ஏறினன் என்றிதை எடுத்து
வங்கம் போயபின் வருந்து துயர் எய்தி

அங்கு வாழ்வோர் யாவரும் இன்மையின்
மன்னுயிர் ஓம்புமிம் மாபெரும் பாத்திரம்
என்னுயிர் ஓம்புதல் யானோ பொறேஎன்
தவந்தீர் மருங்கில் தனித்துயர் உழந்தேன்
சுமந்தென் பாத்திரம் என்றனன் தொழுது

கோமுகி என்னுங் கொழுநீர் இலஞ்சியின்
ஓரியாண் டொருநாள் தோன்றென விடுவோன்
அருளறம் பூண்டாங் காருயி ரோம்புநர்
உளரெனில் அவர்கைப் புகுவாய் என்றாங்
குண்ணா நோன்போ டுயிர்பதிப் பெயர்ப்பழி

அந்நா ளாங்கவன் தன்பாற் சென்றே
என்னுற் றனையோ என்றியான் கேட்பத்
தன்னுற் றனபல தானெடுத் துரைத்தனன்
குணதிசைத் தோன்றிக் காரிருள் சீத்துக்
குடதிசைச் சென்ற ஞாயிறு போல

மணிபல் லவத்திடை மன்னுடம் பிட்டுத்
தணியா மனனுயிர் தாங்குங் கருத்தொடு
சாவக மாளுந் தலைத்தாள் வேந்தன்
ஆவயிற் றுதித்தனன் ஆங்கவன் தானென

உரை

1--2ஆங்கவற்கு ஒரு நாள் அம்பலப் பீடிகைப் பூங்கொடி நல்லாய் புகுந்தது கேளாய்-அந்த ஆபுத்திரனுக்கு அம்பலப்பீடிகையினிடம் ஒரு நாள் நேர்ந்ததைப் பூங்கொடியனைய நங்காய் கேட்பாயாக; ஆங்கவன்: ஒரு சொல். நல்லா யென்றது மணிமேகலையை.

2--8. மாரி நடுநாள் வல்லிருள் மயக்கத்து-மழைத்துளிகளையுடைய இடையாமத்தில் வலிய இருட்கலப்பிலே, ஆரிடை உழந்தோர் அம்பலம் மரீஇ - அரிய வழியில் வருந்தி வந்தோர் சிலர் அம்பலத்தையடைந்து, துயில்லோன் தன்னைத் தொழுதனர் ஏத்தி - உறங்கிக் கொண்டிருந்த ஆபுத்திரனை யெழுப்பி வணங்கித் துதித்து, வயிறுகாய்பெரும்பசி மலைக்கும் என்றலும் - வயிற்றினைக் காய்கின்ற பெரும் பசியானது வருத்தும் என உரைத்தலும், ஏற்றூண் அல்லது வேற்றூண் இல்லோன் - இரந்துண்ணும் உணவினையன்றி வேறு உணவில்லாத ஆபுத்திரன், ஆற்றுவது காணான்