|
உரை
1.இன்னும் கேளாய் இளங்கொடி மாதே-இளமை பொருந்தியகொடி போலும்
மாதே இன்னும் யான் கூறுவதனைக் கேட்பாயாக ; இன்னும் - மற்றுமென்னும் பொருட்டு:
2--8.அந்நாள்
அவனை ஓம்பிய நல்ஆ-சாலி யென்பாள் ஆபுத்திரனை ஈன்று போகட்டுச் சென்ற
அந்நாளில் அவனைப் பாதுகாத்த நல்ல பசுவானது, தண்ணென் சாவகத் தவள மால்வரை
- குளிர்ச்சி மிக்க சாவக நாட்டிலுள்ள பெரிய தவளமலைக் கண்ணே, மண் முகன்
என்னும் மாமுனி இடவயின் - பெருமை பொருந்திய மண் முகன் என்னும் முனிவனிடத்தில்,
பொன்னின் கோட்டது பொற்குளம்பு உடையது - பொன்னாலாய கொம்பினையுடையதும்
பொன்னாலாகிய குளம்பினையுடையதும் ஆகி, தன் நலம் பிறர் தொழத் தான் சென்று
எய்தி-தனது நலத்தினைக் கண்டு பிறர் எல்லாம் வணங்கும்படி சென்று அடைந்து,
ஈனா முன்னம் இன்
|