90
95
100
105
110
115
120
|
உண்டென உணர்தலின் உரவோர் களைந்தனர்
கண்டனை யாகெனக் கடுநகை எய்தி
உடம்புவிட் டோடும் உயிருருக் கொண்டோர்
இடம்புகும் என்றே எமக்கீங் குரைத்தாய்
அவ்வுயிர் எவ்வணம் போய்ப்புகும் அவ்வகை
செவ்வனம் உரையெனச் சினவா திதுகேள்
உற்றதை உணரும் உடலுயிர் வாழ்வுழி
மற்றைய உடம்பே மன்னுயிர் நீங்கிடில்
தடிந்தெரி ஊட்டினுந் தானுண ராதெனின்
உடம்பிடைப் போனதொன் றுண்டென உணர்நீ
போனார் தமக்கோர் புக்கிலுண் டென்பது
யானோ வல்லேன் யாவரும் உணர்குவர்
உடம்பீண் டொழிய உயிர்பல காவதம்
கடந்துசேண் சேறல் கனவினுங் காண்குவை
ஆங்கனம் போகி அவ்வுயிர் செய்வினை
பூண்ட யாக்கையின் புகுவது தெளிநீ
என்றவன் உரைத்தலும் எரிவிழி நாகனும்
நன்றறி செட்டி நல்லடி வீழ்ந்து
கள்ளும் ஊனும் கைவிடின் இவ்வுடம்பு
உள்ளுறை வாழுயிர் ஓம்புதல் ஆற்றேன்
தமக்கொழி மரபின் சாவுறு காறும்
எமக்கா நல்லறம் எடுத்தரை என்றலும்
நன்று சொன்னாய் நன்னெறிப் படர்குவை
உன்றனக் கொல்லும் நெறியறம் உரைக்கேன்
உடைகல மாக்கள் உயிருய்ந் தீங்குறின்
அடுதொழில் ஒழிந்தவர் ஆருயிர் ஓம்பி
மூத்துவிளி மாவொழித் தெவ்வுயிர் மாட்டும்
தீத்திறம் ஒழிகெனச் சிறுமகன் உரைப்போன்
ஈங்கெமக் காகும் இவ்வறம் செய்கேம்
ஆங்குனக் காகும் அரும்பொருள் கொள்கெனப்
பண்டும் பண்டும் கலங்கவிழ் மாக்களை
உண்டோம் அவர்தம் உறுபொருள் ஈங்கிவை
விரைமரம் மென்றுகில் விழுநிதிக் குப்பையோ
டிவையிவை கொள்கென எடுத்தனன் கொணர்ந்து |