பக்கம் எண் :

பக்கம் எண் :213

::TVU::
16. ஆதிரை பிச்சையிட்ட காதை

என்புழிப் பரிமேலழகர் உரைத்தமை காண்க. வான் பொருள்-மிக்க பொருள். கெட்ட பொருள் - தீயபொருளென்பாருமுளர். கையுதிர்க் கோடலும் : உம்; உடனிகழ்ச்சி.

11--16. வங்கம் போகும் வாணிகர் தம்முடன் தங்கா வேட்கையின் தானும் செல்வுழி-கலத்திற் செல்லும் வணிகர்களுடன் பல விடத்தும் செல்ல வேண்டுமென்னும் விருப்பத்தால் சாதுவனும் செல்கின்ற விடத்து, நளி இரு முந்நீர் வளி கலன் வௌவ - அகன்ற பெரிய கடலில் காற்று மரக்கலத்தினைக் கவர, ஒடி மரம் பற்றி ஊர்திரை உதைப்ப - கலத்தினின்றும் ஒடிந்த பாய்மரத் துண்டினைப் பிடித்துக் கொண்டு ஊர்கின்ற அலைகள்செலுத்தச் சென்று, நக்க சாரணர் நாகர் வாழ்மலைப் பக்கஞ் சார்ந்து-நக்க சாரணர்களாகிய நாகர் உறைகின்ற மலைப்பக்கத்தை யடைந்து, அவர் பான்மையன் ஆயினன் - அவர்கள் வயத்தினனாயினன் ;

தங்கா வேட்கை - ஓரிடத்திலே தங்கவிடாத வேட்கை. வளி கலத்தை வௌவுதலாவது-நெறியிற் செல்லவிடாது தடுத்துச் சிதைத்தல். ஒடிமரம் - ஒடியாகிய மரமென்றுமாம். உதைத்தல் - உந்தல் ; 1"ஓடுந் திரைகளுதைப்ப வுருண்டுருண்டு" என்பது காண்க. நக்கம் - நக்நம் என்ற வடசொற் சிதைவு. சாரணர்-சரிப்பவர். உடையில்லாமற் சஞ்சரிப்பவராகலின் நாகர், ''நக்க சாரணர்'' எனப்பட்டார். நாகர்-நாக இலச்சினையுடைமையால் அப் பெயர் பெற்றன ரென்பர். சாரணராகிய நாகரென்க.

17--21.நாவாய் கேடுற நன்மரம் பற்றிப் போயினன் தன்னோடு உயிர் உயப் போந்தோர் - மரக்கலம் அழியப் பாய்மரத்தைப் பிடித்துச் சென்ற சாதுவனுடன் உயிர் பிழைக்கப் போந்தவர்கள், இடையிருள் யாமத்து ஏறிதிரைப் பெருங்கடல் - மிக்க இருளையுடைய நள்ளிரவில் வீசுகின்ற அலைகள் செறிந்த பெருங் கடலில், உடைகலப்பட்டாங்கு ஒழிந்தோர் தம்முடன் - உடைந்த மரக்கலத்திலகப்பட்டு ஆண்டு இறந்தோருடன், சாதுவன் தானும் சாவுற்றான் என - சாதுவனும் இறந்தனன் என்று கூற ;
சாதுவன் மரத்தைப் பற்றிப் போயினாற்போல் இவர்களும் மரங்களைப் பற்றிக்கொண்டு உயிர் உய்யப் போந்தார் என்க. போந்தார் - காவிரிப்பூம் பட்டினத்திற்கு வந்தவர். இருளையுடைய இடையாமம் என்க. யாமம்-இரவு.
22--28. ஆதிரை நல்லாள் ஆங்கது தான் கேட்டு-ஆதிரை நல்லாள் அதனைக் கேட்டு, ஊரீரேயோ ஒள்ளழல் ஈமம் தாரீரோ எனச் சாற்றினள் கழறி-ஊரிலுள்ளோர்களே ஒள்ளிய தழல் பொருந்திய ஈமத்தினைத் தருவீர் என்று கூறிப் புலம்பி, சுடலைக் கானில்


1 சீவக. 56.