29--34. படுத்துடன்
வைத்த பாயற் பள்ளியும்-அதனுளகப்படுத்தி ஒருசேர வைத்த படுக்கையிடமும்,
உடுத்த கூறையும் ஒள் எரி உறா அது -- உடுத்திய ஆடையும் ஒள்ளிய அழல்
பற்றாமல், ஆடிய சாந்தமும் அசைந்த கூந்தலில் சூடிய மாலையும் தொல்
நிறம் வழாது - பூசிய சாந்தமும் அசைகின்ற குழலிற் சூடிய மாலையும்
பழைய நிறம் வழுவாமல், விரைமலர்த் தாமரை ஒருதனி இருந்த திருவின்
செய்யோள் போன்று இனிது இருப்ப - மணம் பொருந்திய தாமரை மலரில்
ஒப்பின்றி வீற்றிருக்கும் திருமகள்போல இனிதே இருப்ப ;
|
35--44. தீயுங் கொல்லாத்
தீவினை யாட்டின்யேன் யாது செய்கேன் என்று அவள் ஏங்கலும்-தீயினாலுங்
கொல்லப்படாத தீவினையேன் இனி யாது செய்வேன் என்று அம் மெல்லியல்
ஏங்குதலும், ஆதிரை கேள்-ஆதிரையே கேட்பாயாக, உன் அரும்பெறல்
கணவனை - உனது பெறற்கருங் கொழுநனை, ஊர் திரை கொண்டாங்கு உய்ப்பப்
போகி - தவழ்கின்ற அலைகள் அவ்வடத்திற் செலுத்த அவன் சென்று,
நக்க சாரணர் நாகர் வாழ் மலைப் பக்கம் சேர்ந்தனன் - நக்க
சாரணராகிய நாகர்கள் வாழ்கின்ற மலைப் பக்கத்தை யடைந்தனன்,
பல்லியாண்டு இரான் - அவன் அங்கே பலவாண்டுகள் தங்கான், சந்திரதத்தன்
எனும் ஓர் வாணிகன் - சந்திரதத்தன் என்னும் ஒரு வணிகனது, வங்கம்
தன்னொடும் வந்தனன் தோன்றும்-மரக்கலத்துடன் வந்து தோன்றுவன்,
நின் பெரும் துன்பம் ஒழிவாய் நீஎன-ஆகலின் நீ நினது பெரிய துயரினின்றும்
நீங்குவாய் என்று, அந்தரம் தோன்றி அசரீரி அறைதலும்-அசரீரி
வானிலே தோன்றி மொழிதலும் ; |