பக்கம் எண் :

பக்கம் எண் :233

::TVU::
18. உதயகுமரன் அம்பலம் புக்க காதை

சென்று சம்பாபதியை வணங்கி "பிச்சைப் பாத்திரத்தைக் காயசண்டிகையின் கையிற் கொடுத்துவிட்டு ஒளித்துச் சென்ற மணிமேகலையை இங்குள்ள பாவைகளுள்ளே யான் எவ்வாறுணர்வேன்; நீ அவளை எனக்குக் காட்டாயாயின் பன்னாளாயினும் நான் இவ்விடத்திலேயே பாடு கிடப்பேன்; மணிமேகலையை இங்கே விடுத்து நான்மட்டும் போகேன்; உன் திருவடியைத் தொட்டேன்" என்று சூளுரைத்தான்.]





5





10





15





20





25

ஆங்கது கேட்டாங் கரும்புண் அகவயின்
தீத்துறு செங்கோல் சென்றுசுட் டாங்குக்
கொதித்த உள்ளமொடு குரம்புகொண் டேறி
விதுப்புறு நெஞ்சினள் வெய்துயிர்த்துக் கலங்கித்
தீர்ப்பலிவ் வறமெனச் சித்திரா பதிதான்

கூத்தியன் மடந்தையர்க் கெல்லாங் கூறும்
கோவலன் இறந்தபின் கொடுந்துய ரெய்தி
மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்தது
நகுதக் கன்றே நன்னெடும் பேரூர்
இதுதக் கென்போர்க் கெள்ளுரை யாயது

காதலன் வீயக் கடுந்துய ரெய்திப்
போதல் செய்யா உயிரொடு புலந்து
நளியிரும் பொய்கை யாடுநர் போல
முளியெரிப் புகூஉம் முதுகுடிப் பிறந்த
பத்தினிப் பெண்டிர் அல்லேம் பலர்தம்

கைத்தூண் வாழ்க்கை கடவிய மன்றே
பாண்மகன் பட்டுழிப் படூஉம் பான்மையில்
யாழினம் போலும் இயல்பினம் அன்றியும்
நறுந்தா துண்டு நயனில் காலை
வறும்பூத் துறக்கும் வண்டு போல்குவம்

வினைமொழி காலைத் திருவின் செல்வி
அனையே மாகி ஆடவர்த் துறப்பேம்
தாபதக் கோலந் தாங்கின மென்பது
யாவரும் நகூஉம் இயல்பின தன்றே
மாதவி ஈன்ற மணிமே கலைவல்லி

போதவிழ் செல்வி பொருந்துதல் விரும்பிய
உதய குமரனாம் உலகாள் வண்டின்
சிதையா உள்ளஞ் செவ்விதின் அருந்தக்
கைக்கொண் டாங்கவள் ஏந்திய கடிஞையைப