100
105
110
115
120
125
130
|
தன்னுறு கணவன் சாவுறிற் காவலும்
நிறையிற் காத்துப் பிறர்பிறர்க் காணாது
கொண்டோன் அல்லது தெய்வமும் பேணாப்
பெண்டிர்தங் குடியிற் பிறந்தாள் அல்லள்
நாடவர் காண நல்லரங் கேறி
ஆடலும் பாடலும் அழகுங் காட்டிச்
சுருப்புநாண் கருப்புவில் அருப்புக்கணை தூவச்
செருக்கயல் நெருங்கட் சுருக்குவலைப் படுத்துக்
கண்டோர் நெஞ்சங் கொண்டகம் புக்குப்
பண்டேர் மொழியிற் பயன்பல வாங்கி
வண்டிற் றுறக்குங் கொண்டி மகளிரைப்
பான்மையிற் பிணித்துப் படிற்றுரை யடக்குதல்
கோன்முறை யன்றோ குமரற் கென்றலும்
உதய குமரன் உள்ளம் பிறழ்ந்து
விரைபரி நெடுந்தேர் மேற்சென் றேறி
ஆயிழை யிருந்த அம்பல மெய்திக்
காடமர் செல்வி கடிப்பசி களைய
ஓடுகைக் கொண்டுநின் றூட்டுநள் போலத்
தீப்பசி மாக்கட்குச் செழுஞ்சோ றீத்துப்
பாத்திரம் ஏந்திய பாவையைக் காண்டலும்
இடங்கழி காமமொ டடங்கா னாகி
உடம்போ டென்றன் உள்ளகம் புகுந்தென்
நெஞ்சங் கவர்ந்த வஞ்சக் கள்வி
நோற்றூண் வாழ்க்கையின் நோசிதவந் தாங்கி
ஏற்றூண் விரும்பிய காரணம் என்னெனத்
தானே தமியள் நின்றோள் முன்னர்
யானே கேட்டல் இயல்பெனச் சென்று
நல்லாய் என்கொல் நற்றவம் புரிந்தது
சொல்லாய் என்று துணிந்துடன் கேட்ப
என்னமர் காதல னிராகுலன் ஈங்கிவன்
தன்னடி தொழுதலும் தகவென வணங்கி
அறைபோய் நெஞ்சம் அவன்பால் அணுகினும்
இறைவளை முன்கை ஈங்கிவன் பற்றினும்
தொன்று காதலன் சொல்லெதிர் மறுத்தவ்
நன்றி யன்றென நடுங்கினள் மயங்கிக்
|