135
140
145
150
155
160
165
|
கேட்டது மொழிவேன் கேள்வி யாளரில்
தோட்ட செவியைநீ யாகுவை யாமெனில்
பிறத்தலும் மூத்தலும் பிணிப்பட் டிரங்கலும்
இறத்தலு முடைய திடும்பைக் கொள்கலம்
மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து
மிக்க நல்லறம் விரும்புதல் புரிந்தேன்
மண்டமர் முருக்குங் களிறனை யார்க்குப்
பெண்டிர் கூறும் பேரறி வுண்டோ
கேட்டனை யாயின் வேட்டது செய்கென
வாட்டிறற் குரிசிலை மடக்கொடி நீங்கி
முத்தை முதல்வி முதியாள் இருந்த
குச்சரக் குடிகை தன்னகம் புக்காங்கு
ஆடவர் செய்தி அறிகுநகர் யாரெனத்
தோடலர் கோதையைத் தொழுதனள் ஏத்தி
மாய விஞ்சை மந்திரம் ஓதிக்
காயசண் டிகையெனுங் காரிகை வடிவாய்
மணிமே கலைதான் வந்து தோன்ற
அணிமலர்த் தாரோன் அவள்பாற் புக்குக்
குச்சரக் குடிகைக் குமரியை மரீஇப்
பிச்சைப் பாத்திரம் பெரும்பசி உழந்த
காயசண் டிகைதன் கையிற் காட்டி
மாயையின் ஒளித்த மணிமே கலைதனை
ஈங்கிம மண்ணீட் டியாரென உணர்கேன்
ஆங்கவள் இவளென் றருளா யாயிடின்
பன்னா ளாயிரனும் பாடு கிடப்பேன்
இன்னுங் கேளாய் இமையோர் பாவாய்
பவளச் செவ்வாய்த் தவளவாள் நகையும்
அஞ்சனஞ் சேராச் செங்கயல் நெடுங்கணும்
முறிந்துகடை நெரிய வளைந்தசிலைப் புருவமும்
குவிமுட் கருவியும் கோணமும் கூர்நுனைக்
கவைமுட் கருவியும் ஆகிக் கடிகொளக்
கல்விப் பாகரிற் காப்புவலை யோட்டி
வல்வா யாழின் மெல்லிதின் விளங்க
முதுக்குறை முதுமொழி எடுத்துக் காட்டிப்
புதுக்கோள் யானை வேட்டம் வாய்த்தென
|