|
எய்யா மையலேன் யான் என்று அவன் சொல-அங்ஙனங்
கூறி
யது ஒரு தெய்வந்தானோ அன்றி வானவர் உலகில்
தோன்றிய
வேறு பொருளோ இன்னதென அறியாத மயக்கமுடையேன்
என்று உதயகுமரன் கூற ;
|
ஒருத்தி என்றது மணிமேகலா தெய்வத்தை-
எய்யாமை - அறியாமை : உரிச்சொல், திப்பியங் கொல்லோ -
வியப்பினை விளைவிக்கும் வேறொன்றோ என்றுமாம்.
|
86--89. சித்திராபதி தான் சிறு நகை எய்தி
- சித்திராபதி சிறுநகையடைந்து, அத்திறம் விடுவாய் அரசிளங்குரிசில்-இளவரசர்
பெருந்தகையே நின் கனவிற்றோன்றி ஒருத்தி கூறியதனை விடுவாயாக,
காமக் கள்ளாட்டிடை மயக்குற்றன தேவர்க்காயினும் சிலவோ செப்பின்-கூறுங்கால்
வானவர்களிடத்தும் காமக் கள்ளாட்டின் கண் மயங்கிச் செய்த
செய்கைகள் சிலவாமோ ;
|
காமக் கள்ளாட்டிடை - காமமாகிய கள்ளை
உண்டவழி. அறிவை மயக்குதலானும், வெளிப்படுந்தோறும் விருப்பத்தை
யுண்டாக்குதலானும் காமம் கள்ளினை யொப்பதாயிற்று ;
1
"களித்தொறுங்
கள்ளுண்டல் வேட்டற்றாற் காமம், வெளிப்படுந் தோறு மினிது"
என்பது காண்க. தேவர்களும் மயங்கிச் செய்தன பல வென்றபடி.
|
90--98. மாதவன் மடந்தைக்கு வருந்து
துயர் எய்தி ஆயிரஞ் செங்கண் அமரர்கோன் பெற்றதும் - கௌதம
முனிவர் மனைவியாகிய அகலிகையின் மேலுள்ள வேட்கையால் மிக்க
துயருழந்து தேவர்க்கரசனாகிய இந்திரன் அம்முனிவரால் ஆயிரஞ்
செங்கண் அடைந்த செய்தியும், மேருக் குன்றத்து ஊருநீர்ச் சரவணத்து-இமயமலையிலுள்ள
பரந்த நீரினையுடைய சரவணப் பொய்கையில், அருந்திறல் முனிவர்க்கு
ஆரணங்காகிய - அரிய வலி பொருந்திய முனிவர் எழுவர்க்கு அரிய
அணங்குபோல்வாராகிய, பெரும் பெயர்ப் பெண்டிர் பின்பு உளம்
போக்கிய - பெரிய புகழையுடைய அவர் மனைவியர் பின்னே உளத்தைச்
செலுத்திய, அங்கி மனையாள் - அக்கினிதேவன் மனைவி, அவரவர்
வடிவாய்த் தாங்கா வேட்கைதனை அவண் தணித்ததூஉம் - அம் முனிவர்
மனைவியரின் வடிவத்தைத் தனித்தனி கொண்டு அவனது நீங்காத வேட்கையைத்
தணித்த செய்தியும், கேட்டும் அறிதியோ வாட்டிறல் குரிசில்
- கேட்டும் அறியாயோ வாள்வலியுடைய அரசர் பெருந்தகையே ;
|
துயரெய்தி
அவளைச் சேர்ந்து அதனாற் பெற்றதும் என விரித்துரைத்துக் கொள்க.
இந்திரன் கௌதம முனிவர் மனைவியாகிய அகலிகையை விரும்பிச்
சேர்ந்து அம் முனிவரிட்ட சாபத்தால் ஆயிரங்கண் பெற்றான் என்பது
புராணக்கதை. மேரு - இமயம் ; 2"இமையவில் வாங்கிய"
என்பது காண்க. ஊர்தல் - பரத்தல். சரவணம் - |