என்றலும்
- இளங்கோவுக்குச் செங்கோன்முறைமை அல்லவோ
என உரைத்தலும்,
நல்லரங்கு-1"எழுகோ
லகலத் தெண்கோ னீளத், தொருகோலுயரத் துறுப்பின தாகி, உத்தரப்
பலகையோ டரங்கின் பலகை, வைத்த விடை நிலம் நாற்கோ லாக, ஏற்ற
வாயி லிரண்டுடன் பொலியத், தோற்றிய வரங்கு." நாடக மகளிர்க்கு
ஆடல் முதலிய மூன்றினொன்றுங் குறையலாகா தென்பது, 2"ஆடலும்
பாடலு மழகு மென்றிக், கூறிய மூன்றி னொன்றுகுறை படாமல்" என்பதனா
னறிக ; சுரும்பு, கரும்பு, அரும்பு என்பன வலித்தல் பெற்றன. அரும்பு
- மொட்டறாமலர். செருக்கயல் - ஒன்றை யொன்று எதிர்ந்து போர்
செய்யுங் கயல். கொண்டி மகளிர்-பொருளைக் கொள்ளும் பரத்தையர்,
கோன்முறை-அரசநீதி என்றுமாம். குமரற்கு:முன்னிலையிற் படர்க்கை.
குடியிற் பிறந்தாளல்லள். கொண்டி மகளிருட் பட்டாள். அவளைப் பிணித்து
அடக்குதல் கோன்முறை யன்றோ வென்க.
112--118. உதயகுமரன் உள்ளம் பிறழ்ந்து
- உதயகுமரன் மனம் மாறுதலடைந்து, விரைபரி நெடுந்தேர் மேற்சென்
றேறி-விரைந்த செலவினையுடைய குதிரைகள் பூட்டப்பெற்ற பெரிய தேரின்மீது
ஏறிச் சென்று, ஆயிழை இருந்த அம்பலம் எய்தி - மணிமேகலையிருந்த
அம்பலத்தை யடைந்து, காடமர் செல்வி கடிப்பசி களைய ஓடுகைக் கொண்டு
நின்று ஊட்டுநள் போல - பேய்களின் பசியை நீக்குதற்கு ஓட்டினைக்
கையிற் கொண்டு நின்று ஊட்டுகின்ற காடு கிழாளைப் போல, தீப்பசி
மாக்கட்குச் செழுஞ் சோறு ஈத்துப் பாத்திரம் ஏந்திய பாவையைக்
காண்டலும் - கொடிய பசியையுடைய மக்களுக்குச் செழுஞ்சோறளித்துக்
கடிஞை ஏந்தி நின்ற மணிமேகலையைக் கண்ட வளவில் ;
கடி - பேய். ஊட்டுநளாகிய செல்வி போல வென்க.
119--127. இடங்கழி காமமொடு அடங்கான்
ஆகி - வரம்பின்றிப் பெருகிய காமத்தோடு அடங்காதவனாய், உடம்போடு
என்றன் உள்ளகம் புகுந்து என் நெஞ்சம் கவர்ந்த வஞ்சக் கள்வி
- உடலுடன் என்னுடைய நெஞ்சினுட் புகுந்து எனது உள்ளத்தைக் கவர்ந்த
வஞ்சக் கள்வியாகிய மணிமேகலை, நோற்றூண் வாழ்க்கையின் நொசிதவம்
தாங்கி - விரதங்களாற் பட்டினி விட்டுண்ணும் வாழ்க்கையையுடைய
நுண்ணிய தவத்தைத் தாங்கி, ஏற்றூண் விரும்பிய காரணம் என்என -
இரந்துண்ணுதலை விரும்பிய காரணம் யாது என்று, தானே தமியள் நின்றோள்
முன்னர் - தானே தனியளாய் நின்றோள்முன், யானே கேட்டல் இயல்பு
எனச் சென்று - யானே நேரிற் சென்று கேட்பது நன்று எனப் போய்,
நல்லாய் என்கொல் நற்றவம் புரிந்தது சொல்லாய் என்று துணிந்துடன்