இடங்கழி - வரம்பு கடந்த;
1
"இடங்கழி
நெஞ்சத் திளமையானை" என்பதன் உரை காண்க, நொசிதவம்-உடல்
இளைத்தற் கேதுவாகிய தவமென்றும், மனம் நுண்ணிதாதற் கேதுவாகிய
தவமென்றும் ஆம்;
2
"நோற்றுணல் யாக்கை நொசிதவத்தீர்'''' என்றார் இளங்கோடிகளும்.
உதயகுமாரன் அம்பலமெய்திப் பாவையைக் காண்டலும் அடங்கானாகி,
யானே கேட்டல் இயல்பெனச் சென்று, ''புரிந்தது என்கொல் சொல்
லாய்'' என்று கேட்ப என்க.
|