பக்கம் எண் :

பக்கம் எண் :255

Manimegalai-Book Content
19. சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை



100





105





110





115





120





125





130

வம்மெனக் கூஉய் மகிழ்துணை யொடுதன்
செம்மலர்ச் செங்கை காட்டுபு நின்று
மன்னவன் றானும் மலர்க்கணை மைந்தனும்

இன்னிள வேனிலும் இளங்காற் செல்வனும்
எந்திரக் கிணறும் இடுங்கற் குன்றமும்
வந்துவீ ழருவியும் மலர்ப்பூம் பந்தரும்
பரப்புநீர்ப் பொய்கையுங் கரப்புநீர்க் கேணியும்
ஒளித்துறை யிடங்களும் பளிக்கறைப் பள்ளியும்

யாங்கணுந் திரிந்து தாழ்ந்துவிளை யாடி
மகத வினைஞரும் மராட்டக் கம்மரும்
அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும்
தண்டமிழ் வினைஞர் தம்மொடு கூடிக்
கொண்டினி தியற்றிய கண்கவர் செய்வினைப்

பவளத் திரள்காற் பன்மணிப் போதிகைத்
தவள நித்திலத் தாமந் தாழ்ந்த
கோணச் சந்தி மாண்வினை விதானத்துத்
தமனியம் வேயந்த வகைபெறு வனப்பிற்
பைஞ்சேறு மெழுகாப் பசும்பொன் மண்டபத்து

இந்திர திருவன் சென்றினி தேறலும்
வாயிலுக் கிசைத்து மன்னவன் அருளால்
சேய்நிலத் தன்றியுஞ் செவ்விதின் வணங்கி
எஞ்சா மண்ணசைஇ இகலுளந் துரப்ப
வஞ்சியி னிருந்து வஞ்சி சூடி

முறஞ்செவி யானையுந் தேரும் மாவும்
மறங்கெழு நெடுவாள் வயவரு மிடைந்த
தலைத்தார்ச் சேனையொடு மலைத்துத்தலை வந்தோர்
சிலைக்கயல் நெடுங்கொடி செருவேற் றடக்கை
ஆர்புனை தெரியல் இளங்கோன் றன்னால்

காரியாற்றுக் கொண்ட காவல் வெண்குடை
வலிகெழு தடக்கை மாவண் கிள்ளி
ஒளியொடு வாழி ஊழிதோ றூழி
வாழி யெங்கோ மன்னவர் பெருந்தகை
கேளிது மன்னோ கெடுகநின் பகைஞர்

யானைத் தீநோய்க் கயர்ந்துமெய் வாடியிம்