பக்கம் எண் :

பக்கம் எண் :256

Manimegalai-Book Content
19. சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை




135





140





145





150





155





160

மாநகர்த் திரியுமோர் வம்ப மாதர்
அருஞ்சிறைக் கோட்டத் தகவயிற் புகுந்து
பெரும்பெயர் மன்ன நின்பெயர் வாழ்த்தி
ஐயப் பாத்திரம் ஒன்றுகொண் டாங்கு

மொய்கொண் மாக்கண் மொசிக்கவூண் சுரந்தனள்
ஊழிதோ றூழி உலகங் காத்து
வாழி யெங்கோ மன்னவ என்றலும்
வருக வருக மடக்கொடி தானென்று
அருள்புரி நெஞ்சமொ டரசன் கூறலின்

வாயி லாளரின் மடக்கொடி தான்சென்று
ஆய்கழல் வேந்தன் அருள்வா ழியவெனத்
தாங்கருந் தன்மைத் தவத்தோய் நீயார்
யாங்கா கியதிவ் வேந்திய கடிஞையென்று
அரசன் கூறலும் ஆயிழை உரைக்கும்

விரைத்தார் வேந்தே நீநீடு வாழி
விஞ்சை மகள்யான் விழவணி மூதூர்
வஞ்சந் திரிந்தேன் வாழிய பெருந்தகை
வானம் வாய்க்க மண்வளம் பெருகுக
தீதின் றாக கோமகற் கீங்கீது

ஐயக் கடிஞை அம்பல மருங்கோர்
தெய்வந் தந்தது திப்பிய மாயது
யானைத் தீநோய் அரும்பசி கெடுத்தது
ஊனுடை மாக்கட் குயிர்மருந் திதுவென
யான்செயற் பாலதென் இளங்கொடிக் கென்று

வேந்தன் கூற மெல்லியல் உரைக்கும்
சிறையோர் கோட்டஞ் சீத்தருள் நெஞ்சத்து
அறவோர்க் காக்கும் அதுவா ழியரென
அருஞ்சிறை விட்டாங் காயிழை உரைத்த
பெருந்தவர் தம்மாற் பெரும்பொரு ளெய்தக்

கறையோ ரில்லாச் சிறையோர் கோட்டம்
அறவோர்க் காக்கினன் அரசாள் வேந
உரை
1--6. முதியாள் திருந்தடி மும்மையின் வணங்கி - சம்பாபதியின் திருந்திய அடிகளை மும்முறை வணக்கஞ்செய்து, மதுமலர்த