75--78.
79--92.
|
பாசிலை
செறிந்த பசுங்காற் கழையொடு - பசிய இலைகள் நெருங்கிய பசிய தண்டினையுடைய
மூங்கிலுடன், வால் வீசெறிந்த மராஅம் கண்டு-வெள்ளிய பூக்கள் நெருங்கிய
வெண்கடம்பினைக் கண்ணுற்று, நெடியோன் முன்னொடு நின்றனன் ஆம்என
- கண்ணன் தன் முன்னோனொடு நிற்கின்றனனாம் என்று, தொடிசேர்
செங்கையில் தொழுது நின்று ஏத்தியும்-வீரவளை யணிந்த சிவந்த கைகளாற்
கும்பிட்டு நின்று துதித்தும் ;
முன் - தமையன் ; பலதேவர். கழைக்குக் கண்ணனும் வெண் கடம்பிற்குப்
பலதேவரும் உவமைகள். வெண்கடம்பிற்குப் பலதேவர் உவமையாதல் 1"ஒருகுழை
யொருவன்போ லிணர்சேர்ந்த மராஅமும்" 2 நாஞ்சில்
வலவ னிறம்போலப் பூஞ்சினைச், செங்கான் மராஅந் தகைந்தன" என்பவற்றுள்ளும்
காணப்படுமாறறிக.
ஆடற் கூத்தினோடு அவிநயம் தெரிவோர்-கதை தழுவாது ஆடுதலையுடைய கூத்தினோடு
பாட்டின் பொருள் தோன்றக் கை காட்டும் அவிநயத்தினை அறிவோரும்,
நாடகக் காப்பிய நன்னூல் நுனிப்போர் - நாடகக் காப்பியமாகிய
நல்ல நூல்களைக் கூர்ந்து ஆராய்வோரும், பண் யாழ் நரம்பில் பண்ணுமுறை
நிறுப்போர் - பண்களையுடைய யாழ் நரம்பில் பண்களை முறையே நிறுத்துவோரும்,
தண்ணுமைக் கருவிக் கண் எறி தெரிவோர் - தோற் கருவியாகிய மத்தளத்தின்
முகத்தில் அடித்தலை ஆராய்வோரும், குழலொடு கண்டம் கொளச்சீர்
நிறுப்போர்-வேய்ங் குழலுடன் மிடற்றோசையும் பொருந்தும் வண்ணம்
தாளவறுதி செய்வோரும், பழு நிய படால் பலரொடு மகிழ்வோர்-முற்றுப்
பெற்ற இசைப் பாடல்களைப் பலருடன் பாடி மகிழ்வோரும், ஆரம் பரிந்த
முத்தம்கோப் போர்-மாலைகள்அறுபடுதலாற் சிந்திய முத்துக்களைக்
கோப்போரும், ஈரம் புலர்ந்த சாந்தம் திமிர்வோர் - ஈரம் உலர்ந்த
சந்தனத்தைத் திமிர்வோரும், குங்கும வருணம் கொங்கையின் இழைப்
போர் - சிவந்த தொய்யிற் குழம்பைக் கொங்கைகளில் எழுதுவோரும்,
அம் செங்கழுநீர் ஆயிதழ் பிணிப்போர்-அழகிய செங்கழுநீர் மலரின்
அழகிய இதழ்களைக் கட்டுவோரும், நல்நெடுங் கூந்தல் நறுவிரை குடைவோர்
- நல்ல நீண்ட குழலில் நறுமணங்களைப் புகுத்தி அப்புவோரும், பொன்னின்
ஆடியிற் பொருந்துபு நிற்போர் - பொன்னாலாகிய சுற்றுவட்டத்தினையுடைய
கண்ணாடியிற் பொருந்திக் கண்டு நிற்போரும் ஆகிய, ஆங்கவர் தம்மோடு
- அவர்களுடன், அகலிரு வானத்து வேந்தனிற் சென்று விளையாட்டு அயர்ந்து
- அகன்ற பெரிய விண்ணுலகத்து வேந்தனாகிய இந்திரனைப் போலச்
சென்று விளையாட்டை விரும்பிச் செய்து;
1 கலி.
26. 2 கார். 19.
|