பக்கம் எண் :

பக்கம் எண் :264

::TVU::
19. சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை

உரை


 

 

 

 

 

 

93--99.




 

 

 

 

 

100--106

நாடகம் - கதை தழுவிவருங் கூத்து. நாடகக் காப்பியமாகிய நன்னூலென்க; இன்பத் துறையில் நிற்பவராகலின் நாடகக் காப்பியங் கூறினார். முன்னின்ற பண் யாழுக்கு அடை. யாழ்-பேரியாழ் முதலிய நால்வகை யாழ். நரம்பு - குரல், துத்தும், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பன. பண் - பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி என்னும் பெரும்பண்களும், அவற்றின் திறங்களும், அவ்விரு கூற்றின் அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என்னும் இன வேறுபாடுகளும் ஆகிய பண்கள். எறி: முதனிலைத் தொழிற் பெயர் ; 1"பண்ணமை முழவின் கண்ணெறியறிந்து" என்பதுங் காண்க. பழுநிய - இசை முற்றிய. திமிர்தல்-தடவி யுதிர்த்தல்; குடைவோர் - துவரினும் ஓமாலிகையினும் ஊறிய நன்னீரால் கூந்தலை ஆட்டுவோர் என்றுமாம். அவிநயந் தெரிவோர் முதலாகிய அவர்தம்மோடு சென்று விளையாட்டயர்ந்து என்க.

குருந்தும் தளவும் திருந்து மலர்ச் செருந்தியும் - குருந்தும் செம்முல்லையும் அழகிய பூக்களையுடைய செருந்தியும், முருகுவிரி முல்லையும் கருவிளம் பொங்கரும் - மணம் விரிகின்ற முல்லையும் கருவிள மரச்செறிவும், பொருந்துபு நின்று திருந்து நகைசெய்து- அமர்ந்திருந்து இன்ப நகை புரிந்து, குறுங்கால நகுலமும் நெடுஞ்செவி முயலும் - குறிய கால்களையுடைய கீரியையும் நீண்ட காதுகளையுடைய முயலையும், பிறழ்ந்து பாய் மானும் இறும்பு அகலா வெறியும் - துள்ளிக் குதிக்கின்ற மானையும் குறுங்காடுகளினின்று நீங்காத ஆட்டையும், வம்மெனக் கூஉய் மகிழ்துணையொடு தன் செம்மலர்ச் செங்கை காட்டுபு நின்று - வாருமென அழைத்துப் பெருந்தேவியுடன் தன் சிவந்த மலர் போன்ற செவ்விய கையாற் காட்டி நின்று ;

செருந்தி, கருவிளை யென்பன மர வேறுபாடுகள். பொங்கர் - சோலை; சோலை போலும் மரச் செறிவு. இறும்பு - குறுங்காடு. வெறி- ஆடு. மகிழ்துணை - இராமாதேவி. மகிழ்துணையொடு பொருந்துபு நின்று நகைசெய்து வம்மெனக் கூஉய்ச் செங்கை காட்டுபு நின்று என்க.

.மன்னவன்தானும் மலர்க்கணை மைந்தனும் - அரசர் பெருமானும் மலராகிய அம்புகளையுடைய காமவேளும், இன்னிள வேனிலும் இளங்காற் செல்வனும் - இன்பம் பயக்கும் இளவேனிலும் தென்றற் காற்றாகிய செல்வனும், எந்திரக் கிணறும் இடுங்கற் குன்றமும் - நீரை நிறைக்கவேண்டுமாயின் நிறைத்துப் போக்க வேண்டுமாயிற் போக்குதற்குரிய எந்திரம் அமைந்த கிணறும்செய் குன்றும், வந்து வீழ் அருவியும் மலர்ப்பூம்பந்தரும் - வந்து விழுகின்ற


1 சிலப். 3: 61.