பக்கம் எண் :

பக்கம் எண் :266

::TVU::
19. சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை

உரை
 











117--130.


















தொழிலரும், வந்த நாட்டு வண்ணக் கம்மரும்" என்பதனாலும் அறியப்படும். தமிழ் - தமிழ் நாடு ; தமிழ் வினைஞர் எனப் பொதுப் படக் கூறினமையின் அவர் பல தொழிலினும் வல்லுநராதல் பெற்றாம். போதிகை-தூணின் மேல் உத்தரம் முதலியவற்றைத் தாங்குங் கட்டை; கோணச் சந்தி - கூடல்வாய். பைஞ்சேறு - கோமயம் ; ஆவின்சாணம். 1"பைஞ்சேறு மெழுகிய நன்னகர்" என்றார் பிறரும். பொன் மண்டப மாகையாற் பைஞ்சேற்றால் மெழுகப் படாதாயிற்று ; சந்தனத்தால் மெழுகப்பட்ட தென்னலுமாம் ; 2"மங்கல வெள்ளை வழித்து முத்தீர்த்தபின்" என வருதல் காண்க. செய்வினையையுடைய மண்டபம், கால் முதலியவற்றையுடைய பொன் மண்டபமென்க.

வாயிலுக்கு இசைத்து மன்னவன் அருளால் - வாயில் காப்போர்க்கு உரைத்து அரசன் பணியால். சேய்நிலத்தன்றியும் செவ்வியின் வணங்கி - தூரமான இடத்தில் தாம் நின்றதன்றியும் முறைமையால் வணக்கஞ்செய்து, எஞ்சா மண் நசைஇ இகல்உளம் துரப்ப - குறையாத நிலத்தை விரும்பி மாறுபாடானது உள்ளத்தைச் செலுத்த, வஞ்சியின் இருந்து வஞ்சி சூடி-வஞ்சி நகரத்தின் கண்ணிருந்து வஞ்சிமாலை சூடி, முறஞ்செவி யானையும் தேரும் மாவும்-முறம் போன்ற காதுகளையுடைய யானையும் தேரும் குதிரையும், மறங்கெழு நெடுவாள் வயவரும் மிடைந்த-பெரிய வாட்படையைக் கையிற்கொண்ட ஆண்மைமிக்க வீரரும் செறிந்த, தலைத்தார்ச் சேனையொடு-முதன்மையாகிய தூசிப் படையோடு, மலைத்துத் தலைவந்தோர் - பொருதற்குவந்த இருபெரு வேந்தராகிய சேரபாண்டியருடைய, சிலைக்கயல் நெடுங்கொடி - வில்லும் கயலுமாகிய நெடிய கொடிகளை, செருவேல் தடக்கை ஆர்புனை தெரியல் இளங்கோன் தன்னால் - போர்புரியும் வேற்படையைக் கொண்ட பெரிய கைகளையுடைய ஆத்திமலரால் தொடுக்கப்பட்ட கண்ணியையுடைய இளங்கோவினால், காரியாற்றுக் கொண்ட - காரி யாற்றின்கண் கைப்பற்றிய'' காவல் வெண்குடை வலிகெழு தடக்கை மாவண்கிள்ளி - உயிர்களைக் காக்கும் வெண் குடையினையும் வலிமிக்க பெருங் கைகளையும் உடைய மாவண்கிள்ளி, ஒளியொடு வாழி ஊழிதோ றூழி - நீ பல்லூழி காலம் ஒளியுடன் வாழ் வாயாக, வாழி எங்கோ மன்னவர் பெருந்தகை - எம் தலைவனாகிய அரசர் பெருந்தகையே வாழ்வாயாக, கேளிது மன்னோ கெடுகநின் பகைஞர் - நின் பகைஞர் ஒழிக ! அரசே இதனைக் கேட்பாயாக ;

(48) கோட்டங் காவலர் (50) இசைத்து மென்றேகி, (117) வாயிலுக்கிசைத்து, மன்னவனருளால் (138) மன்னவ என்றலும்என முடியும் ; மன்னவனருளால் வணங்கி யென்றலுமாம். பகைவர் மண்ணினை விரும்பி வஞ்சிசூடிப் போருக்குச் செல்லுதல் வஞ்சித்திணையாகும்


1 பெரும்பாண், 218. 2 சீவக. 1414.