பக்கம் எண் :

பக்கம் எண் :267

::TVU::
19. சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை

உரை
 
















 

 

131--138.








139--145.

இதனை, 1"எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன், அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்றே" என்பதனானறிக. வஞ்சியினிருந்து வஞ்சி சூடிச் சேனையொடு தலைவந்தோர் என்க. மலைந்து என்பதனை மலையவெனத் திரிக்க. இளங்கோன்-தம்பியாகிய நலங்கிள்ளி. மாவண்கிள்ளி : பெயர்; மிக்க வண்மையையுடைய கிள்ளி யென்றுமாம்; இவன் கிள்ளிவளவன் எனப்படுபவன். கிள்ளி : விளி. கிள்ளிவளவன் பகைவனாகிய காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளியையும், அவனுக்குத் துணையாக வந்தெதிர்த்த சேர பாண்டியர்களையும் தன் தம்பியாகிய நலங்கிள்ளியால் காரியாறு என்னும் யாற்றின் பாங்கர் வென்றன னென்க. காரியாறு ஓர் நதி என்பதனை, 2"செல்கதிமுன் னளிப்பார்தந் திருக்காரிக் கரைபணிந்து" என்பதனானறிக, ஒளி - கடவுட்டன்மை ; 3"உறங்கு மாயினு மன்னவன் றன்னொளி, கறங்கு தெண்டிரை வையகங் காக்குமால்" என்பது காண்க : பரிமேலழகரும் இம் மேற் கோள் கொண்டே 4"இளைய ரினமுறைய ரென்றிகழார் நின்ற, ஒளியோ டொழுகப் படும்" என்னுங் குறளுரையில் ''ஒளி - உறங்கா நிற்கவும் உலகங் காக்கின்ற அவரது கடவுட்டன்மை,'' என்றுரைத்தார். மன்னும் ஓவும் அசைகள்.

யானைத்தீ நோய்க்கு அயர்ந்து மெய் வாடி இம் மாநகர்த் திரியும் ஓர் வம்ப மாதர் - யானைத்தீ என்னும் பசிநோயால் சோர்ந்து உடல் வாட்டமுற்று இப் பெரிய நகரத்தின்கண் சுற்றிக்கொண்டிருந்த ஒரு புதிய மங்கை, அருஞ்சிறைக் கோட்டத்து அகவயிற் புகுந்து - அரிய சிறைச்சாலையின் உள்ளே நுழைந்து, பெரும் பெயர் மன்ன நின்பெயர் வாழ்த்தி - பெரிய புகழுடைய அரசே நினது பெயரை வாழ்த்தி, ஐயப் பாத்திரம் ஒன்றுகொண்டு ஆங்கு மொய்கொள் மாக்கள் மொசிக்க ஊண் சுரந்தனள் - ஒரே பிச்சைப் பாத்திரத்தைக் கொண்டு அங்கு நெருங்குதலையுடைய மக்கள் அனைவரும் உண்ணுமாறு உணவினைச் சுரந்தளித்தனள், ஊழிதோறூழி உலகம் காத்து வாழி எங்கோ மன்னவ என்றலும்- ஊழியூழியளவும் உலகினைக் காத்து எம் தலைவனாகிய அரசே வாழ்வாயாக என வுரைத்தலும் ;

நோய்க்கு அயர்ந்து - நோயால் அயர்ந்து. வம்பு - புதுமை; ஈறு திரிந்தது. பெரும்பெயர்-மிக்க புகழ். மொசிக்க-உண்ண; 5"மையூன் மொசித்த வொக்கலொடு" என்பது காண்க.

வருக வருக மடக்கொடிதான் என்று அருள்புரி நெஞ்சமொடு அரசன் கூறலின் - அங்ஙனமாயின் அவ் விளங்கொடி ஈண்டு வருக வருக என்று அரசன் அருண்மிகுந்த உளத்தினோடும் உரைத்தலின், வாயிலாளரின் மடக்கொடிதான் சென்று-


1 தொல். புறம், 7. 2 பெரிய. திருநா. 343. 3சீவக. 248. 4 குறள். 698- 5 புறம். 96..