பக்கம் எண் :

பக்கம் எண் :275

Manimegalai-Book Content
20. உதயகுமரனை வாளாலெறிந்த காதை

115





120





125

வானம் போவுழி வந்தது கேளாய்

அந்தரஞ் செல்வோர் அந்தரி இருந்த
விந்த மால்வரை மீமிசைப் போகார்
போவா ருளரெனிற் பொங்கிய சினத்தள்
சாயையின் வாங்கித் தன்வயிற் றிடூஉம்
விந்தங் காக்கும் விந்தா கடிகை

அம்மலை மிசைப்போய் அவள்வயிற் றடங்கினள்
கைம்மை கொள்ளேல் காஞ்சன இதுகேள்
ஊழ்வினை வந்திங் குதய குமரனை
ஆருயி ருண்ட தாயினும் அறியாய்
வெவ்வினை செய்தாய் விஞ்சைகெ காஞ்சன்

அவ்வினை நின்னையும் அகலா தாங்குறும்
என்றிவை தெய்வங் கூறலும் எழுந்து
கன்றிய நெஞ்சிற் கடுவினை யுருத்தெழ
விஞ்சையன் போயினன் விலங்குவிண் படர்ந்தென்.
உரை

1--8. அரசன் ஆணையின் ஆயிழை அருளால் - மணிமேகலையின் அருண்மொழியினையேற்ற மன்னவனது ஆணையினாலே, நிரயக் கொடுஞ்சிறை நீக்கிய கோட்டம் - நிரயத் துன்பத்தைத் தரும் கொடிய சிறை நீக்கப்பெற்ற சாலை, தீப்பிறப் புழந்தோர்-தீக்கதியிற் பிறந்து வருந்தினோர், செய்வினைப் பயத்தால்-முன்செய்த நல்வினைப் பயனால், யாப்புடை நற்பிறப்பு எய்தினர்போல - உறுதியுடைய நற்பிறப்பினை அடைந்தமைபோல, பொருள்புரி நெஞ்சில் புலவோன் கோயிலும் - வாய்மை நான்கினையும் விரும்பிய உள்ளமுடைய மெய்யறிவினனாகிய புத்தன் கோயிலும், அருள்புரி நெஞ்சத்து அறவோர் பள்ளியும் - அருளை விரும்பும் மனத்தையுடைய அறவோர் வாழுமிடமும், அட்டிற் சாலையும் அருந்துநர் சாலையும்- மடைப் பள்ளியும் உணவுண்ணு மிடமுமாகி, கட்டுடைச் செல்வக் காப்புடைத்தாக - உறுதியுள்ள செல்வக் காவலை யுடையதாக;

சிறை நீக்கிய - சிறையாந் தன்மையைப் போக்கிய. பொருள் - வாய்மை; 1"பொருள் சேர் புகழ்" என்பதிற்போல. புரிதல்-விரும்புதல். ஆகி யென ஒரு சொல் விரித்துரைக்க. செல்வக் காப்பு-இனிய காவல். கோட்டம் காப்புடைத்தாக வென்க.

9--13. ஆயிழை சென்றதூஉம் ஆங்கவள் தனக்கு வீயா விழுச்சீர் வேந்தன் பணித்ததூஉம்-மணிமேகலை அரசன்முன் சென்றதனையும் அவளுக்கு மாறாத சிறந்த புகழையுடைய அரசன் கூறியதனையும்,


1 குறள் : 5.