அறிவுரைத்த - உலக வறவியின் பக்கலில் வருந்திப் பழமைக் கட்டுரை கூறிய, இவ்
வம்பலன் தன்னொடு - இவ் வயலானுடன், இவ் வைகு இருள் ஒழியாள்-இருள் தங்கிய
இவ் விரவில் நீங்காள், இங்கிவள் செய்தி இடையிருள் யாமத்து வந்தறிகுவன்
எனமனங் கொண்டு எழுந்து - இவளதுசெயலை இருளையுடைய இடையாமத்தில் வந்து அறிவேன்
என்று உளத்திற்கொண்டு புறப்பட்டு, வான் தேர்ப்பாகனை மீன் திகழ் கொடியனை
கருப்பு வில்லியை அருப்புக் கணை மைந்தனை - வானிலுலாவும் தென்றலந் தேர்ப்பாகனை
மீன் விளங்கும் கொடியுடையானைக் கரும்பாகிய வில்லுடையானை அரும்புகளாகிய அம்புகளை
யுடையவனை, உயாவுத் துணையாக வயாவொடும் போகி - வினாவுந் துணையாகக்கொண்டு
வேட்கை நோயுடன் சென்று ;
ஆங்கவள்
உரைத்த-மணிமேகலையால் அறிவுறுக்கப்பட்ட.அயர்ந்து-மறந்து என்றுமாம். அறிவுரைத்த
- பண்டு அறிந்தவர் போலுரைத்த. வம்பலன் - புதியன் ; ஏதிலான். இவனிருத்தலின்
இவ் விரவில் புறம் போகாளெனக் கருதினானென்க. வான்தேர் - வானிலுலாவும் தென்றலாகிய
தேர். பாகன் கொடியன் வில்லி மைந்தன் என ஒரு பொருள் மேற் பல பெயர்கள்
வந்தன. பாகனும் கொடியனும் வில்லியும் மைந்தனுமாகிய காமனை யென்க. அரும்பு,
அருப்பென்றாயது. துணையாக்கொண்டு என விரித்துரைக்க.
94-101. ஊர்
துஞ்சு யாமத்து ஒரு தனி எழுந்து-ஊர் முழுவதும் உறங்கும் நள்ளிரவில் தான் மட்டும்
தனியாக எழுந்து, வேழம் வேட்டு எழும் வெம்புலிபோல, - யானையை விரும்பிப் புறப்படும்
கொடிய புலியைப்போல, கோயில் கழிந்து வாயில் நீங்கி - அரண்மனையை நீங்கி
வாயிலைக் கடந்து, ஆயிழை இருந்த அம்பலம் அணைந்து-மணிமேகலை இருந்த ஊரம்பலத்தை
அடைந்து, வேக வெந்தீ நாகம் கிடந்த போகுயர் புற்றளை புகுவான் போல - வேகத்தினையுடைய
கொடிய நஞ்சினைக் கொண்ட பாம்பு கிடந்த மிக வுயர்ந்த புற்றின் துவாரத்தில்
நுழைகின்றவனைப்போல, ஆகம் தோய்ந்து சாந்து அலர் உறுத்த - மார்பிற் பூசப்பெற்ற
சாந்தமானது தனது வரவை ஆண்டுள்ளோருக்கு அறிவுறுத்த, ஊழ் அடியிட்டு அதன் உள்ளகம்
புகுதலும்-முறையாக அடியை வைத்து அவ் வம்லபத்தின் உள்ளே புகுதலும் ;
வேகம் - விடவேகம். தீ - நஞ்சு. முன்பு
''புற்றடங் கரவிற் புக் கொளித் தடங்கினன்'' என்றதற்கேற்ப, ஈண்டு ''நாகங்கிடந்த
புற்றளை புகுவோன் போல'' என்றார். பின் ''அரவம் பை விரித்தென. எழுந்து'' என்பதும்
இதுபற்றியே, போகு - நீண்ட;
1"வார்தல்
போகல் ஒழுகல் மூன்றும், நேர்பும் நெடுமையுஞ் செய்யும் பொருள" என்பது காண்க.
அலருறுத்த - பலரறியச் செய்ய.
1
தொல். உரி: 19.
|