102--109. ஆங்கு முன் இருந்த அலர்தர் விஞ்சையன்-அங்கே முன்பு மறைந்திருந்த
மலர்ந்த மாலையினையுடைய விஞ்சையன், ஈங்கிவன் வந்தனன் இவள்பால் என்றே
- இவன் இப்பொழுது இவளிடமே வந்திருக்கின்றனன் என்று கருதி, வெஞ்சின அரவம்
நஞ்சு எயிறு அரும்ப-நெடுஞ்சினமுடைய பாம்பு நஞ்சு பொதி பற்கள் தோன்றுமாறு,
தன் பெரு வெகுளியின் எழுந்து பை விரித்தென - தனது மிக்க சீற்றத்துடன் எழுந்து
படத்தை விரித்தாற்போல, இருத்தோன் எழுந்து - காஞ்சனன் எழுந்து, பெரும்பின்
சென்று அவன் சுரும்பறை மணித்தோள் துணிய வீசி - உதயகுமரனது முதுகின் புறமாகச்
சென்று அவனுடைய வண்டுகள் ஒலிக்கும் மாலையை யணிந்த அழகிய தோள்கள் துணிபடுமாறு
வாளால் எறிந்து, காயசண்டிகையைக் கைக்கொண்டு அந்தரம் போகுவல் என்றே அவள்பால்
புகுதலும் - காயசண்டிகையைக் கைப்பற்றிக் கொண்டு விசும்பிடைச் செல்லுவேன்
என நினைந்து கரந்துரு வெய்திய மணிமேகலையிடஞ் செல்லுதலும் ;
விஞ்சையன் இருந்தோன் எழுந்தென்க. பெரும்பின்
சென்று நெடிது பின் சென்று என்றுமாம்.சுரும்பு அறை மணித்தோள்-மலையையொத்த
அழகிய தோள் என்பாருமுளர் ; சுரும்பு-மலை; அறை: உவமவுருபு.
110-115. நெடுநிலைக்
கந்தின் இடவயின் விளங்க கடவுள் எழுதிய பாவை ஆங்கு உரைக்கும் - நெடிய நிலையாகிய
தூணினிடத்தில் விளங்கும் கடவுட் டச்சனாகிய மயனால் எழுதப்பட்ட பாவை அப்
பொழுது கூறும், அணுகல் அணுகல் விஞ்சைக் காஞ்சன - விஞ்சையனாகிய காஞ்சனனே
அணுகாதே அணுகாதே, மணிமேகலை அவள் மறைந்துரு எய்தினள் - அவள் மணிமேகலை காய
சண்டிகையின் வடிவத்தைக் கொண்டுள்ளாள், காயசண்டிகை தன் கடும்பசி நீங்கி
- நின் மனைவி தனது கொடிய பசிநோய் நீங்கப் பெற்று, வானம் போவுழி வந்தது
கேளாய் - விசும்பின் வழியே செல்லும்பொழுது நிகழ்ந்த துன்பத்தைக் கேள்;
கடவுள்
- தெய்வத் தச்சன் ;
1"மயனெனக்
கொப்பா வகுத்த பாவையின், நீங்கேன்" எனப் பின் வருதலுங் காண்க. வந்தது
- நிகழ்ந்த துன்பம்; வினைப்பெயர்.
116-122. அந்தரம்
செல்வோர் அந்தரி இருந்த விந்த மால்வரை மீமிசைப் போகார் - வானிலே செல்வோர்
துர்க்கை எழுந்தருளியுள்ள பெரிய விந்த மலையின் மேலே செல்லார், போவார்
உளரெனில் பொங்கிய சினத்தள் - அங்ஙனம் போவார் உளராயின் மூண்டெழுஞ் சீற்றமுடையளாய்,
சாயையின் வாங்கிக் தன்வயிற்று இடூஉம் - தன் சாயையினால் இழுத்துத் தன் வயிற்றில்
அடக்கும்.
1
மணி. 21: 132 - 3.
|