15
20
25
30
35
40
|
திட்டி விடமுண நின்னுயிர் போம்நாள
கட்டழ லீமத் தென்னுயிர் சுட்டேன்
உவவன மருங்கில் நின்பா லுள்ளம்
தவிர்விலே னாதலின் தலைமகள் தோன்றி
மணிபல் லவத்திடை யென்னையாங் குய்த்துப்
பிணிப்பறு மாதவன் பீடிகை காட்டி
என்பிறப் புணர்ந்த என்முன் தோன்றி
உன்பிறப் பெல்லாம் ஒழிவின் றுரைத்தலின
பிறந்தோர் இறத்தலும் இறந்தோர் பிறத்தலும்
அறந்தரு சால்பும் மறந்தரு துன்பமும்
யான்நினக் குரைத்துநின் இடர்வினை யொழிக்கக்
காயசன் டிகைவடி வானேன் காதல் !
வைவாள் விஞ்சையன் மயக்குறு வெகுளியின்
வெவ்வினை யுருப்ப விளிந்தனை யோவென
விழுமக் கிளவியின்
வெய்துயிர்த்துக் புலம்பி
அழுதன ளேங்கி அயாவுயிர்த் தெழுதலும்
செல்லல் செல்லல் சேயரி நெடுங்கண்
அல்லியந் தாரோன் தன்பாற் செல்லல்
நினக்கிவன் மகனாத் தோன்றி யதூஉம்
மனக்கினி யாற்குநீ மகளா யதூஉம்
பண்டும் பண்டும் பல்பிறப் புளவால்
கண்ட பிறவியே யல்ல காரிகை
தடுமாறு பிறவித் தாழ்தரு தோற்றம்
விடுமாறு முயல்வோய் விழுமங் கொள்வேல்
என்றிவை சொல்லி யிருந்தெய்வ முரைத்தலும்
பொன்றிதழ் மேனிப் பூங்கொடி பொருந்திப்
பொய்யா நாவொடிப் பொதியிலிற் பொருந்திய
தெய்வம் நீயோ திருவடி தொழுதேன்
விட்ட பிறப்பின் வெய்துயிர்த் தீங்கிவன்
திட்டி விடமுணச் செல்லுயிர் போயதும்
நெஞ்சு நடுங்கி நெடுந்துயர்
கூரயான்
விஞ்சையன் வாளி னிவன்விளிந் ததூஉம்
அறிதலு மறிதியோ அறிந்தனை யாயின்
பெறுவேன் தில்லநின் பேரரு ளீங்கென
|