பக்கம் எண் :

பக்கம் எண் :288

Manimegalai-Book Content
21. கந்திற்பாவை வருவதுரைத்த காதை



115





120





125





130





135





140





145

தீவினை யுறுதலுஞ் செத்தோர் பிறத்தலும்
வாயே யென்று மயக்கொழி மடவாய்
வழுவறு மரணும் மண்ணுங் கல்லும்

எழுதிய பாவையும் பேசா வென்ப
தறிதலும் அறிதியோ அறியாய் கொல்லோ
அறியா யாயின் ஆங்காது கேளாய்
முடித்தவரு சிறப்பின் மூதூர் யாங்கணும்
கொடித்தேர் வீதியும் தேவர் கோட்டமும்

முதுமர இடங்களும் முதுநீர்த் துறைகளும்
பொதியிலும் மன்றமும் பொருந்துபு நாடிக்
காப்புடை மாநகர்க் காவலுங் கண்ணி
யாப்புடைத் தாக அறிந்தோர் வலித்து
மண்ணினுங் கல்லினும் மரத்தினுஞ் சுவரினும்

கண்ணிய தெய்வதங் காட்டுநர் வகுக்க
ஆங்கத் தெய்வதம் அவ்விடம் நீங்கா
ஊன்கணி னார்கட் குற்றதை யுரைக்கும்
என்திறங் கேட்டியோ இளங்கொடி நல்லாய்
மன்பெருங் தெய்வ கணங்களி னுள்ளேன்

துவதிக னென்பேன் தொன்றுமுதிர் கந்தின்
மயனெனக் கொப்ப வகுத்த பாவையின்
நீங்கேன் யான்என் நிலையது கேளாய்
மாந்த ரறிவது வானவ ரறியார்
ஓவியச் சேனனென் னுறுதுணைத் தோழன்

ஆவதை யிந்நகர்க் காருரைத் தனரோ
அவனுடன் யான்சென் றாடிட மெல்லாம்
உடனுறைந் தார்போ லொழியா தெழுதிப்
பூவும் புகையும் பொருந்துபு புணர்த்து
நாநனி வருந்தவென் நலம்பா ராட்டலின்

மணிமே கலையான் வருபொரு ளெல்லாம்
துணிவுட னுரைத்தேன் என்சொல் தேறெனத்
தேறே னல்லேன் தெய்வக் கிளவிகள்
ஈறுகடை போக எனக்கரு ளென்றலும்
துவதிக னுரைக்குஞ் சொல்லலுஞ் சொல்லுவேன்

வருவது கேளாய் மடக்கொடி நல்லாய்