பக்கம் எண் :

பக்கம் எண் :289

Manimegalai-Book Content
21. கந்திற்பாவை வருவதுரைத்த காதை




150





155





160





165





170





175





180

மன்னுயிர் நீங்க மழைவளங் கரந்து
பொன்னெயிற் காஞ்சி நகர்கவி னழிய
ஆங்கது கேட்டே ஆருயிர் மருந்தாய்
ஈங்கிம் முதியா ளிடவயின் வைத்த

தெய்வப் பாத்திரம் செவ்விதின் வாங்கித்
தையல்நின் பயந்தோர் தம்மோடு போகி
அறவணன் தானும் ஆங்குள னாதலின்
செறிதொடி காஞ்சி மாநகர் சேர்குவை
அறவண னருளால் ஆய்தொடி ஆவ்வூர்ப்

பிறவண மொழிந்துநின் பெற்றியை யாகி
வறனோ டுலகின் மழைவளந் தரூஉம்
அறனோ டேந்தி ஆருயி ரோம்புவை
ஆய்தொடிக் கவ்வூர் அறனொடு தோன்றும்
ஏது நிகழ்ச்சி யாவும் பலவுள

பிறவற முரைத்தோர் பெற்றிமை யெல்லாம்
அறவணன் றனைக்குநீ யுரைத்த அந்நாள்
தவமுந் தருமமும் சார்பிற் றோற்றமும்
பவமுறு மார்க்கமும் பான்மையி னுரைத்து
மறவிரு ளிரிய மன்னுயி ரேமுற

அறவெயில் விரித்தாங் களப்பி லிருத்தியொடு
புத்த ஞாயிறு தோன்றுங் காறும்
செத்தும் பிறந்துஞ் செம்பொருள் காவா
இத்தலம் நீங்கேன் இளங்கொடி யானும்
தாயரும் நீயுந் தவறின் றாக

வாய்வ தாகநின் மனப்பாட் டறமென
ஆங்கவ னுரைத்துலும் அவன்மொழி பிழையாய்
பாங்கியல் நல்லறம் பலவுஞ் செய்தபின்
கச்சிமுற் றத்து நின்னுயிர் கடைகொள
உத்தர மகதத் துறுபிறப் பெல்லாம்

ஆண்பிறப் பாகி அருளறம் ஒழியாய்
மாண்பொடு தோன்றி மயக்கங் களைந்து
பிறர்கறம் அருளும் பெரியோன் றனக்குத்
தலைச்சா வகனாய்ச் சார்பறுத் துய்தி
இன்னும் கேட்டியோ நன்னுனதல் மடந்தை