பக்கம் எண் :

பக்கம் எண் :290

Manimegalai-Book Content
21. கந்திற்பாவை வருவதுரைத்த காதை





185





190
ஊங்க ணோங்கிய உரவோன் றன்னை
வாங்குதிரை யெடுத்த மணிமே கலாதெய்வம்
சாது சக்கரற் காரமு தீத்தோய்
ஈது நின்பிறப் பென்பது தெளிந்தே
உவவன மருங்கில் நின்பால் தோன்றி

மணிபல் லவத்திடைக் கொணர்ந்தது கேளெனத்
துவதிக னுரைத்துலும துயர்க்கடல் நீங்கி
அவதி யறிந்த அணியிழை நல்லாள்
வலையொழி மஞ்ஞையின் மனமயக் கொழிதலும்
உலகுதுயி லெழுப்பினன் மலர்கதி ரோனென்.

உரை

1--4. கடவுள் எழிதிய நெடுநிலைக் கந்தின் - தெய்வத்தன்மையுடைய பாவை எழுதப்பெற்ற நெடிய நிலையாகிய தூணின், குடவயின் அமைத்த நெடுநிலை வாயில் - மேற்றிசைக்கண் அமைக்கப்பட்ட உயர்நிலை பொருந்திய வாயிலையுடைய, முதியாள் கோட்டத்து அகவயின் கிடந்த - சம்பாபதி கோயிலினுள்ளே துயின்ற, மது மலர்க் குழலி மயங்கினள் எழுந்து - மணிமேகலை மயக்கமுற்று எழுந்து ;

இரட்டுற மொழிதலால் கடவுளால் எழுதப்பட்ட பாவையென்றுங் கொள்க ; கடவுள் - தெய்வத் தச்சனாகிய மயன். குடவயின் அமைத்த வாயில் என்க: கோட்டமுமாம். அமைந்த என்பது பாடமாயின் பொருந்திய என்க.

5--10. விஞ்சையன் செய்தியும் வென்வேல் வேந்தன் மைந்தற்கு உற்றதும்-காஞ்சனன் செய்தியையும் வென்றி வேலையுடைய மன்னவன் மகனுக்கு நேர்ந்த துன்பத்தையும், மன்றப் பொதியில் கந்துடை நெடுநிலைக் கடவுட்பாவை-மன்றமாகிய ஊரம்பலத்தில் நெடிய நிலையாகிய தூணின்கட் பொருந்திய தெய்வப்பாவை, அங்கவற்கு உரைத்த அற்புதக் கிளவியும்-அவ் விஞ்சையனுக்குக் கூறிய வியப்புடைய மொழிகளையும், கேட்டனள் எழுந்து கெடுக இவ்வுருவெனத் தோட்டலர்க்குழலி உள்வரி நீங்கி - கேட்டவளாய் இவ்வடிவம் கெடுக வென்றெழுந்து அவள் தான் கொண்ட மறைந்த வேடத்தினை ஒழிந்து ;

செய்தியும் உற்றதும் அற்புதக் கிளவியும் கேட்டென்றாரேனும், அற்புதக் கிளவியும் அதனாற் செய்தியும் உற்றதும் கேட்டென்று கொள்க. இவ்வுருவங் காரணமாக உதயகுமாரம் வெட்டுண்டமையின் ''கெடுக விவ்வுரு'' என்றாளென்க. தோட்டலர்க் குழலி ; சுட்டு மாத்திரை. உள் வரி - மறைந்த வுருவம்.