பக்கம் எண் :

பக்கம் எண் :2

Manimegalai-Book Content
1. விழாவறை காதை
 


15





20





25





35





30





40





45
சமயக் கணக்கருந் தந்துறை போகிய
அமயக் கணக்கரும் அகலா ராகிக்
காந்துரு வெய்திய கடவு ளாளரும்

பரந்தொருங் கீண்டிய பாடை மாக்களும்
ஐம்பெருங் குழுவும் எண்பே ராயமும்
வந்தொருங்கு குழீ இ வான்பதி தன்னுள்
கொடித்தேர்த் தானைக் கொற்றவன் துயரம்
விடுத்த பூதம் விழாக்கோள் மறப்பின்

மடித்த செவ்வாய் வல்லெயி றிலங்க
இடிக்குரல் முழக்கத் திடும்பை செய்திடும்
தொடுத்தபா சத்துத் தொல்பதி நரகரைப்
புடைத்துணும் பூதமும் பொருந்தா தாயிடும்
மாயிரு ஞாலத் தரசுதலை யீண்டும்

ஆயிரங் கண்ணோன் விழாக்கால் கொள்கென
வச்சிரக் கோட்டத்து மணங்கெழு முரசம்
கச்சை யானைப் பிடர்த்தலை யேற்றி
ஏற்றுரி போர்த்த இடியுறு முழக்கின்
கூற்றுக்கண் விளிக்குங் குருதி வேட்கை

முரசுகடிப் பிடூஉம் முதுகுடிப் பிறந்தோன்
திருவிழை மூதூர் வாழ்கென் றேத்தி
வான மும்மாரி பொழிக மன்னவன்
கோள்நிலை திரியாக் கோலோ னாகுக
தீவகச் சாந்தி செய்தரு நன்னாள்

ஆயிரங் கண்ணோன் தன்னோ டாங்குள
நால்வேறு தேவரும் நலத்தகு சிறப்பில்
பால்வேறு தேவரும் இப்பகுப் படர்ந்து
மன்னன் கரிகால் வளவன் நீங்கியநாள்
இந்நகர் போல்வதோர் இயல்பின தாகிப்

பொன்னகர் வறிதாப் போதுவ ரென்பது
தொன்னிலை யுணர்ந்தோர் துணிபொரு ளாதலின்
தோரண வீதியுந் தோமறு கோட்டியும்
பூரண கும்பமும் பொலம்பா லிகைகளும்
பாவை விளக்கும் பலவுடன் பரப்புமின்
  
காய்க்குலைக் கமுகும் வாழையும் வஞ்சியும்