பக்கம் எண் :

பக்கம் எண் :293

Manimegalai-Book Content
21. கந்திற்பாவை வருவதுரைத்த காதை

என - அழகிய அரி படர்ந்த பெரிய கண்களையுடைய ஆயிழாய் கேட்பாயாக என்று, தெய்வக் கிளவியில் தெய்வம் கூறும்-தெய்வ மொழியாலே கந்திற் பாவை உரைக்கும் ;

பொருந்தி - செல்லுத லொழிந்து நின்று. செல்லுயிர்-நில்லாது திரியுமியல்புடைய உயிர். போயதும்-போனமைக்குக் காரணமாகிய தீவினையையும். விளிந்ததூஉம் - விளிந்ததற்குக் காரணமாகிய தீவினையையும். அறிதலும் அறிதியோ - அறிதலுஞ் செய்தியோ ; இஃது 1"உண்ணலு முண்ணேன் வாழலும் வாழேன்" என்பன போல நின்றது. தில்ல: விழைவுப் பொருட்டு. நல்லவென்பதும் பாடம். நின் பேரருள் பெறுவேன் என்றது நீ கூறும் விடையைக் கேட்பேன் என்றபடி. தெய்வக் கிளவி - வான் மொழி. தெய்வக் கிளவியிற் றெய்வம் எனக் கொண்டு முக்காலமும் அறிந்துரைக்கும் மொழியினையுடைய தெய்வம் என்றுரைத்தலுமாம் ;

47--52. காயங்கரை எனும் பேரியாற்று அடைகரை - காயங்கரை என்னும் பேராற்றின் அடைகரையில், மாயமில் மாதவன் வரு பொருள் உரைத்து-வஞ்சமில் பெருந்தவனாகிய புத்தன் அவதரித்தலைக் கூறி, மருளுடை மாக்கள் மனமாசு கழூஉம் - மயக்கமுற்ற மக்களுடைய மனவழுக்கை நீக்கும், பிரமதருமனைப் பேணினி ராகி-பிரம தருமன் என்னும் முனிவனை வழிபட்டு, அடிசிற்சிறப்புயாம் அடிகளுக்கு ஆக்குதல் விடியல் வேலை வேண்டினம் என்றலும்-யாங்கள் நாள்வெயிற் காலையில் அடிகட்கு அமுதூட்டும் சிறப்புச் செய்தலை வேண்டுகின்றாம் என்றுரைத்து அம்முனிவன் அதற்கிசையலும் நீவிர், மாலை நீங்க மனமகிழ்வு எய்தி - உளத்தில் உவகை யடைந்து இரவு கழிய இருந்து ;

மாயம்-மயங்கிய வறிவுமாம். வருபொருள்-தோன்றுதலாகிய செய்தியை; உலகிலே தீவினை மிகுதோறும் அதனைப் போக்கி அருளறத்தை நிலைநிறுத்தி உயிர்களை நிருவாண மடைவித்தற் பொருட்டுப் புத்ததேவன் தோன்றுவனென்பது பௌத்த நூற்றுணிபு ; இஃது "ஈரெண் ணூற்றோ டீரெட் டாண்டிற், பேரறி வாளன் றோன்றும்" (12 : 77-8) என்பது முதலாக இந்நூலுட் பலவிடத்தும் வருதல் காண்க. மருள் - காமவெகுளி மயக்கங்கள் என்றலும், நீக்க, தோன்ற என்பவற்றின் பின் வேண்டுஞ் சொற்கள் விரித்துரைக்கப்பட்டன. வேண்டினம் என்றலும்-வேண்டினமென்று மடையனை நோக்கிக் கூறுதலும் என்றுரைத்தலுமாம் ; இப்பொருட்கு, மாலை நீங்கக் காலை தோன்ற வரூஉ வீழ்ந்த மடையனை என்றியைத்துரைக்க. மாலை-இரவு.

54--62. காலை தோன்ற வேலையின் வரூஉ நடைத்திறந்து இழுக்கி நல்லடி தளர்ந்து - வைகறைப் பொழுது தோன்ற அப்பொழுது தான் வந்து நடைவகையால் வழுக்கி அடிதளர்ந்து, மடைக்கலம்


1 கலி. 23,