பக்கம் எண் :

பக்கம் எண் :309

Manimegalai-Book Content
22. சிறைசெய் காதை
 


155





160





165





170





175





180





185


நீலக் குஞ்சி நீங்கா தாகலின்
ஏறிய செங்கை யிழிந்தில திந்தக்

காரிகை பொருட்டெனக் ககந்தன் கேட்டு
கடுஞ்சினந் திருகி மகன்றுயர் நோக்கான்
மைந்தன் றன்னை வாளா லெறிந்தனன்
ஊழிதோ றூழி யுலகங் காத்து
வாழி யெங்கோ மன்னவ என்று

மாதவர் தம்முளோர் மாதவன் கூறலும்
வீயா விழுச்சீர் வேந்தன் கேட்டனன்
இன்றே யல்ல என்றெடுத் துரைத்து
நன்றறி மாதவிர் நலம்பல காட்டினிர்
இன்று முளதோ இவ்வினை யுரைமென

வென்றி நெடுவேல் வேந்தன் கேட்பத்
தீதின் றாக செங்கோல் வேந்தென
மாதவர் தம்முளோர் மாதவ னுரைக்கும்
முடிபொரு ளுணர்ந்தோர் முதுநீ ருலகில்
கடியப் பட்டன வைந்துள அவற்றில்

கள்ளும் பொய்யுங் களவுங் கொலையும்
தள்ளா தாகுங் காமம் தம்பால்
ஆங்கது கடிந்தோ ரல்லவை கடிந்தோரென
நீங்கின ரன்றே நிறைதவ மாக்கள்
நீங்கா ரன்றே நீணில வேந்தே

தாங்கா நரகந் தன்னிடை யுழப்போர்
சேயரி நெடுங்கண் சித்திரா பதிமகள்
காதல னுற்ற கடுந்துயர் பொறாஅள்
மாதவி மாதவர் பள்ளியு ளடைந்தனள்
மற்றவள் பெற்ற மணிமே கலைதான்

முற்றா முலையினள் முதிராக் கிளவியள்
செய்குவன் தவமெனச் சிற்றிலும் பேரிலும்
ஐயங் கொண்டுண் டம்பல மடைந்தனள்
ஆங்கவ ளவ்வியல் பினளே யாயினும்
நீங்கா னவளை நிழல்போல் யாங்கணும்

காரிகை பொருட்டால் காமங் காழ்கொள
ஆரிரு ளஞ்சான் அம்பல மடைந்தனன்