பக்கம் எண் :

பக்கம் எண் :310

Manimegalai-Book Content
22. சிறைசெய் காதை



190





195





200





205





210





215
காயசண் டிகைவடி வாயினள் காரிகை
காயசண் டிகையும் ஆங்குள ளாதலின்
காயசண் டிகைதன் கணவ மாகிய

வாய்வாள் விஞ்சைய னொருவன் தோன்றி
ஈங்கிவள் பொருட்டால் வந்தன னிவனென
ஆங்கவன் தீவினை யுருத்த தாகலின்
மதிமருள் வெண்குடை மன்ன நின்மகன்
உதய குமரன் ஒழியா னாக

ஆங்கவள் தன்னை யம்பலத் தேற்றி
ஓங்கிருள் யாமத் திவனையாங் குய்த்துக்
காயசண் டிகைதன் கணவ னாகிய
வாய்வாள் விஞ்சையன் தன்னையுங் கூஉய்
விஞ்சை மகள்பால் இவன்வந் தனனென

வஞ்ச விஞ்சையன் மனத்தையும் கலக்கி
ஆங்கவன் தன்கை வாளா லம்பலத்
தீங்கிவன் றன்னை யெறிந்ததென் றேத்தி
மாதவர் தம்முளோர் மாதவ னுரைத்தலும்
சோழிக ஏனாதி தன்முகம் நோக்கி

யான்செயற் பால திளங்கோன் தன்னைத்
தான்செய் ததனால் தகவிலன் விஞ்சையன்
மாதவர் நோன்பும் மடவார் கற்பும்
காவலன் காவல் இன்றெனின் இன்றால்
மகனை முறைசெய்த மன்னவன் வழியோர்

துயர்வினை யாளன் தோன்றினன் என்பது
வேந்தர் தஞ்செவி யுறுவதன் முன்னம்
ஈங்கிவன் தன்னையும் ஈமத் தேற்றிக்
கணிகை மகளையுங் காவல்செய் கென்றனன்
அணிகிளர் நெடுமுடி யரசாள் வேந்தென்.

உரை

1--4. கடவுள் மண்டிலம் கார்இருள் சீப்ப-ஞாயிற்று மண்டிலம் கரிய இருளை ஒட்டித் தோன்ற, நெடுநிலைக் கந்தின் நின்ற பாவையொடு- நெடிய நிலையாகிய தூணின்கண் உள்ள பாவையுடன், முதியோள் கோட்டம் வழிபடல் புரிந்தோர்-சம்பாபதி கோயிலையும் வழிபாடு செய்வோர், உதயகுமரற்கு உற்றதை உரைப்ப-உதய குமரனுக்கு நேர்ந்த துன்பத்தைக் கூற :