வானத்தில் அசைகின்ற மதில்களை அழித்த வீரவளையணிந்த
தோள்களை யுடைமையின் தூங்செயி லெறிந்த தொடித்தோட்
செம்பியன் எனப் பெயர்பெற்ற சோழ மன்னவன்,
விண்ணவர்
தலைவனை வணங்கி முன்நின்று - வானவர்க் கரசனாகிய
இந்தி
ரனை வணங்கி நின்று, மண்ணகத்து என்றன் வான்பதி
தன்னுள்
- நிலவுலகின்கண் என்னுடைய சிறந்த நகரத்தில்,
மேலோர்
விழைய விழாக்கோள் எடுத்த - மேலோரும் விழையுமாறு
விழாவெடுத்தலை மேற்கொண்ட, நாலேழ் நாளினும்
நன்கு
இனிது உறைக என - இருபத்தெட்டு நாளினும்
ஆண்டு வந்து
இனிதே தங்க வேண்டும் என வேண்ட, அமரர் தலைவன்
ஆங்கது நேர்ந்தது - வானவர் தலைவன் அதற்கு உடன்
பட்டதனை, கவராக் கேள்வியோர் கடவார்ஆகலின்
- தெளிந்த
நூற்கேள்வியினை யுடையார் பிழையார் ஆதலினால்
;
ஓங்குயர் இரண்டும் ஒரு பொருட் பன்மொழிகள்.
மேம்படீஇய -மேம்படுத்துவதற்கு என்றுமாம். தூங்கெயில் - அசைகின்ற மதில்
; தேவர்க்குப் பகைவராகிய அவுணருடைய மதில். செம்பியன் - சோழருள் ஒருவன்.
இவன் எயிலழித்த செய்தி,
1
"ஒன்னா
ருட்குந் துன்னருங் கடுந்திறற், றூங்கெயி லெயிந்தநின், னூங்கணோர்."
2
;"தூங்கெயின்
மூன்றெறிந்த சோழன்கா ணம்மானை" என்பன முதலியவற்றானும் அறியப்படும். வான்பதி
- சிறந்தபதி. மேலோர் - தேவர் முதலாயினோர். நேர்ந்தது : வினைப்பெயர்.
கவரா - ஐயுறாத, தெளிந்த. அருந்தவன் உரைப்ப, செம்பியன் வணங்கி நின்று
உறைகவென, அமரர் தலைவன் நேர்ந்தது என்க.
11--18. மெய்த்திறம் வழக்கு நன்பொருள் வீடு எனும் இத் திறம்
-
மெய்ப் பொருளுணர்த்துகின்ற நூல்வகை, உலகியல்,
நல்ல
தத்துவப் பொருள், முத்தி என்னும் இவ்வகைகளை,
தத்தம்
இயல்பினிற் காட்டும் சமயக் கணக்கரும் - அவரவர்
இயற்
கைக்கேற்ப உணர்த்துகின்ற சமய வாதியரும்,
தம் துறைபோகிய
அமயக் கணக்கரும் - தம்முடைய நெறியிற் கைதேர்ந்த
கால
ங்களை எண்ணிக் கூறும் சோதிடரும், அகலாராகி
- இந் நகரை
விட்டு நீங்காதவராய், கரந்து உரு எய்திய கடவுளாளரும்-தமது
பேரொளியினை மறைத்து மக்கள் கண்களாற் காணுமளவான
வடிவினையாக்கிக் கொண்ட தேவரும், பரந்து ஒருங்கு ஈண்டிய
பாடை மாக்களும் - பலவிடத்து நின்றும்
போந்து ஒருங்குகூடிய
மொழி வேறுபட்ட மக்களும், ஐம்பெருங் குழுவும்
எண்பேராயமும் - அரசர்க்குரிய அமைச்சராதி ஐந்து பெருங்
குழுவினரும் கரணத்தியலவராதி எண்பெருங் கூட்டத்தினரும்,
வந்து ஒருங்கு குழீஇ - வந்து ஒன்றாகக் கூடி
;
1
புறம். 39.
2
சிலப். 29. அம்மானைவரி.
|