வானத்தில் அசைகின்ற மதில்களை அழித்த வீரவளையணிந்த 
 தோள்களை யுடைமையின் தூங்செயி லெறிந்த தொடித்தோட் 
 செம்பியன் எனப் பெயர்பெற்ற சோழ மன்னவன், 
 விண்ணவர் 
 தலைவனை வணங்கி முன்நின்று - வானவர்க் கரசனாகிய 
 இந்தி 
 ரனை வணங்கி நின்று, மண்ணகத்து என்றன் வான்பதி 
 தன்னுள் 
  - நிலவுலகின்கண் என்னுடைய சிறந்த நகரத்தில், 
 மேலோர் 
 விழைய விழாக்கோள் எடுத்த - மேலோரும் விழையுமாறு 
 விழாவெடுத்தலை மேற்கொண்ட, நாலேழ் நாளினும் 
 நன்கு 
 இனிது உறைக என - இருபத்தெட்டு நாளினும் 
 ஆண்டு வந்து 
 இனிதே தங்க வேண்டும் என வேண்ட, அமரர் தலைவன் 
 ஆங்கது நேர்ந்தது - வானவர் தலைவன் அதற்கு உடன் 
 பட்டதனை, கவராக் கேள்வியோர் கடவார்ஆகலின் 
 - தெளிந்த 
 நூற்கேள்வியினை யுடையார் பிழையார் ஆதலினால் 
 ; 
 ஓங்குயர் இரண்டும் ஒரு பொருட் பன்மொழிகள். 
 மேம்படீஇய -மேம்படுத்துவதற்கு என்றுமாம். தூங்கெயில் - அசைகின்ற மதில் 
 ; தேவர்க்குப் பகைவராகிய அவுணருடைய மதில். செம்பியன் - சோழருள் ஒருவன். 
 இவன் எயிலழித்த செய்தி, 
1
"ஒன்னா 
 ருட்குந் துன்னருங் கடுந்திறற், றூங்கெயி லெயிந்தநின், னூங்கணோர்." 
2
;"தூங்கெயின் 
 மூன்றெறிந்த சோழன்கா ணம்மானை" என்பன முதலியவற்றானும் அறியப்படும். வான்பதி 
 - சிறந்தபதி. மேலோர் - தேவர் முதலாயினோர். நேர்ந்தது : வினைப்பெயர். 
 கவரா - ஐயுறாத, தெளிந்த. அருந்தவன் உரைப்ப, செம்பியன் வணங்கி நின்று 
 உறைகவென, அமரர் தலைவன் நேர்ந்தது என்க. 
 
 11--18. மெய்த்திறம் வழக்கு நன்பொருள் வீடு எனும் இத் திறம் 
 - 
 மெய்ப் பொருளுணர்த்துகின்ற நூல்வகை, உலகியல், 
 நல்ல 
 தத்துவப் பொருள், முத்தி என்னும் இவ்வகைகளை, 
 தத்தம் 
 இயல்பினிற் காட்டும் சமயக் கணக்கரும் - அவரவர் 
 இயற் 
 கைக்கேற்ப உணர்த்துகின்ற சமய வாதியரும், 
 தம் துறைபோகிய 
 அமயக் கணக்கரும் - தம்முடைய நெறியிற் கைதேர்ந்த 
 கால 
 ங்களை எண்ணிக் கூறும் சோதிடரும், அகலாராகி 
 - இந் நகரை 
 விட்டு நீங்காதவராய், கரந்து உரு எய்திய கடவுளாளரும்-தமது 
  பேரொளியினை மறைத்து மக்கள் கண்களாற் காணுமளவான 
  வடிவினையாக்கிக் கொண்ட தேவரும், பரந்து ஒருங்கு ஈண்டிய 
 பாடை மாக்களும் - பலவிடத்து நின்றும் 
 போந்து ஒருங்குகூடிய 
 மொழி வேறுபட்ட மக்களும், ஐம்பெருங் குழுவும் 
  எண்பேராயமும் - அரசர்க்குரிய அமைச்சராதி ஐந்து பெருங் 
  குழுவினரும் கரணத்தியலவராதி எண்பெருங் கூட்டத்தினரும், 
 வந்து ஒருங்கு குழீஇ - வந்து ஒன்றாகக் கூடி 
 ;  
  
1
 
 புறம். 39. 
2
 சிலப். 29. அம்மானைவரி. 
 
  
 
 |