பக்கம் எண் :

பக்கம் எண் :329

Manimegalai-Book Content
23, சிறைவிடு காதை




90





95





100





105





110





115





120

பூங்கொடி நல்லாய் புகுந்த திதுவென
மொய்ம்மலர்ப் பூம்பொழில் புக்கது முதலாத்
தெய்வக் கட்டுரை தெளிந்ததை யீறா
உற்றதை யெல்லா மொழிவின் றுரைத்து

மற்று முரைசெயும் மணிமே கலைதான்
மயற்பகை யூட்டினை மறுபிறப் புணர்ந்தேன்
அயர்ப்பது செய்யா அறிவினே னாயினேன்
கல்லாக் கயவன் காரிருட் டான்வர
நல்லாய் ஆணுரு நான்கொண் டிருந்தேன்

ஊணொழி மந்திர முடைமையி னன்றோ
மாணிழை செய்த வஞ்சம் பிழைத்தது
அந்தரஞ் சேறலும் அயலுருக் கோடலும்
சிந்தையிற் கொண்டிலேன் சென்ற பிறவியில்
காதலற் பயந்தோய் கடுந்துயர் களைந்து

தீதுறு வெவ்வினை தீர்ப்பது பொருட்டால்
தையா லுன்றன் றடுமாற் றவலத்து
எய்யா மையல்தீர்ந் தின்னுரை கேளாய்
ஆள்பவர் கலக்குற மயங்கிய நன்னாட்டுக்
காருக மடந்தை கணவனுங் கைவிட

ஈன்ற குழவியொடு தான்வே றாகி
மான்றோர் திசைபோய் வரையாள் வாழ்வுழிப்
புதல்வன் றன்னையோர் புரிநூன் மார்பன்
பதியோ ரறியாப் பான்மையின் வளர்க்க
ஆங்கப் புதல்வன் அவள்திற மறியான்

தான்புணர்ந் தறிந்துபின் றன்னுயிர் நீத்ததும்
நீர்நசை வேட்கையி னெடுங்கட முழலும்
சூன்முதிர் மடமான் வயிறுகிழித் தோடக்
கான வேட்டுவன் கடுங்கணை துரப்ப
மான்மறி விழுந்தது கண்டு மனமயங்கிப்

பயிர்க்குரல் கேட்டதன் பான்மைய னாகி
உயிர்ப்பொடு செங்க ணுகுத்த நீர்கண்டு
ஓட்டி யெய்தோ னோருயிர் துறந்ததுங்
கேட்டு மறிதியோ வாட்டடங் கண்ணி
கடாஅ யானைமுன் கட்கா முற்றோர்